சர்வதேச தர நியமங்களுக்கு அமைவாக இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது சிறைச்சாலை நாளை திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹம்பாந்தோட்டை அங்குனுகொலபலெஸ்ஸயிலுள்ள மேற்படி புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறைச்சாலையே தற்போது 'சுப்பர் சிறைச்சாலை ' என்று அழைக்கப்பட்டுவருகின்றது. ஏனென்றால் சிறைக்கைதிகளுக்கும் பார்வையிட வருபவர்களுக்கும் உயர் சொகுசு வசதிகள் வழங்கும் வகையில் இந்த சிறைச்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 9.5 பில்லியன் ரூபா செலவில் 658 ஹெக்டேயர் பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இச்சிறைச்சாலையானது இவ்வருடம் மார்ச்மாதம் ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் திறக்கப்படவிருந்த நிலையில் இது பிற்போடப்பட்டது. இச்சிறைச்சாலையானது தங்காலை சிறைச்சாலையின் போதிய வசதிகள் இன்மையால் அங்கு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துவரும் சிறைக்கைதிகளுக்கென நிர்மாணிக்கப்பட்டது. சுமார் 1500 சிறைக்கைதிகளை இப்புதிய சிறைச்சாலையில் தங்கவைக்க முடியும்.
இத்திறப்பு விழாவில் மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் , நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள மற்றும் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM