நிலையான தீர்வை நோக்கிய அரசின் பயணத்தைத் தடுக்க மனிதாபிமானம் அற்றவர்கள் முயற்சி: யாழ். இந்துவில் ஜனாதிபதி

Published By: Devika

15 Oct, 2017 | 07:48 AM
image

“மக்களை இணைக்கும் பாலமாக மொழிகள் இருக்க வேண்டுமே தவிர, மக்களைப் பிரிக்கும் கருவியாக இருக்கக்கூடாது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். யாழ். இந்துக் கல்லூரியில், நேற்று (14) நடைபெற்ற தேசிய தமிழ் மொழித் தின விழாவில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இன்று சிலர் மக்களிடையே பேதமையை உருவாக்கும் கருவியாக மொழியைக் கையில் எடுத்திருக்கிறார்கள். ஆனால், மனிதாபிமானம் உள்ள எவரும் அனைத்து மொழிகளையும் மதிப்பதுடன் அவற்றைக் கற்றுக்கொள்ளவும் முன்வர வேண்டும்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையில் முன்னொரு காலத்தில் பல்லினத்தவரும் தத்தமது இன, சமய, மொழி பேதத்தைத் தாண்டி மக்கள் நெருங்கிப் பழகிவந்ததை நினைவுபடுத்திய ஜனாதிபதி, எல்லா இனத்தவரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு தீர்வை ஏற்படுத்த முனையும் தற்போதைய அரசின் பயணத்தை, மனிதாபிமானம் அற்ற சிலர் தடுக்க முயற்சிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

“இன, சமய, மொழி வேறுபாடுகளைத் தாண்டி நாட்டின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமான கல்வி உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு உயர் கல்வியறிவை வழங்கி இந்நாட்டின் சிறந்த பிரஜைகளாக உருவாக்கும் முயற்சியை அரசாங்கம் தொடர்ந்து செய்து வருகிறது” என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, வடபகுதி விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்த தனது கருத்துக்களையும் வெளியிட்டார்.

“வடபகுதி கிழங்கு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் கிழங்கு இறக்குமதியைத் தடைசெய்வது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. இதற்காக உரிய அதிகாரிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவுசெய்துள்ளது. அத்துடன், யாழ்ப்பாண விவசாயிகளுக்கான கடன் உதவிகள் குறித்து அரச, தனியார் வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணம் பெற்றுத் தரவும் அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது.”

இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47