வயதான தந்தை வீட்டிலிருக்கும் வேளை மட்டக்களப்பில் துணிகரக்கொள்ளை 

Published By: Priyatharshan

13 Oct, 2017 | 03:11 PM
image

வயதான தந்தையார் வீட்டிலிருக்கும் வேளை வீட்டின் யன்னலை உடைத்து துணிகரமாக தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு அமிர்தகழி, கதிர்காமத்தம்பி வீதியிலுள்ள வீட்டில் வசிக்கும் அனவரும் வயதான தந்தையொருவரை வீட்டியில் விட்டுவிட்டு உறவினர் வீடொன்றுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வீட்டின் யன்னலை உடைத்து திருடர்கள் வீட்டினுள் நுழைந்து அங்கிருந்த 10 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இவ்வாறு கொள்ளையிடப்பட்ட தங்கநகைகளின் பெறுமதி சுமார் 5 இலட்சம் ரூபாவென தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வீட்டு உரிமையாளர்கள் மறுநாள் காலை வீட்டிற்கு வந்தேபோது வீட்டின் யன்னல் உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டமை தெரிய வந்துள்ளது.

இதையடுத்து வீட்டு உரிமையாளர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதையடுத்த மட்டக்களப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47