சிறைச்சாலைகளில் புதிய ஒருங்கிணைந்த கண்காணிப்பு அமைப்பு – நீதி அமைச்சர்

19 Aug, 2026 | 05:15 PM
image

(செ.கவிஷனா)

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதோடு, கைதிகளின் நலன்களை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு சிறைச்சாலைகளிலும் ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்றை உருவாக்க தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதோடு கைதிகளின் நலன்களை உறுதி செய்வது குறித்து நேற்று களுத்துறை சிறைச்சாலையை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த புதிய அமைப்பானது, சிறைச்சாலைகளில் ஏதேனும் அசவர நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக கைதிகள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காணவும் வழிவகுக்கும். இதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், முப்படை பிரதானிகள், மின்சார சபை, நீர் வழங்கல் சபை, சுகாதாரத் துறை மற்றும் தீயணைப்புப் பிரிவினர் ஆகிய பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

இக்குழுக்கள் குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒருமுறையாவது கூடி சிறைச்சாலை நிலைமைகளை ஆய்வு செய்யும். ஏற்கனவே, சிறைச்சாலைகளில் உள்ள குடிநீர் வசதி குறைபாடுகள், சுகாதாரச் சிக்கல்கள் மற்றும் சிறை அதிகாரிகளின் சேவை தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டு அவற்றுக்கான தீர்வுகளும் எட்டப்பட்டுள்ளன.

மேலும், பிரச்சினைகள் மோதல்களாக மாறுவதற்கு முன்பே அவற்றைக் கண்டறிந்து தடுப்பதும், சிறைக்கைதிகளின் பாதுகாப்பு, நலன்புரிச் சேவைகள் மற்றும் மனித உரிமைகளை முழுமையாக உறுதிசெய்வதுமே இதன் முக்கிய நோக்கமாகும்.

இதன் முதற்கட்டமாக காலி, பூஸ்ஸ மற்றும் மாத்தறை ஆகிய சிறைச்சாலைகளுக்கு நேரடியாக விஜயம் செய்து, இந்த புதிய வேலைத்திட்டத்தை அங்கு நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுநலவாய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டித் தெரிவிலிருந்து...

2026-09-11 18:59:01
news-image

மன்னாரில் கனிம வளங்கள், வனப்பகுதி பிரச்சினைகள்...

2026-09-11 18:57:30
news-image

வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின்...

2026-09-11 18:37:52
news-image

"பசுமைப் பாதை" ; "நாட்டிற்கு ஒரு...

2026-09-11 17:38:46
news-image

முகநூல் களியாட்ட விருந்துகளைக் கண்காணிக்க விசேட...

2026-09-11 17:37:03
news-image

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட...

2026-09-11 16:39:30
news-image

வத்தேகமவில் கார் மோதி நபரொருவர் உயிரிழப்பு...

2026-09-11 16:33:19
news-image

முதலையிடம் போராடி உயிர் தப்பிய இளைஞர்:...

2026-09-11 16:20:52
news-image

செம்மணி உள்ளிட்ட அனைத்து மனித புதைகுழிகள்...

2026-09-11 16:30:28
news-image

2015 பிட்டிகல கொலை வழக்கு: குற்றவாளிக்கு...

2026-09-11 16:24:04
news-image

வற்றாப்பளை சந்தியில் இராணுவப் பயன்பாட்டிலிருந்த அர,...

2026-09-11 15:48:12
news-image

மாகாணசபைத் தேர்தல் விசேட பாராளுமன்ற செயற்குழுவின்...

2026-09-11 15:43:29