தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் வசித்து வந்த வயது முதிர்ந்த பெண் ஒட்டகச்சிவிங்கி ஒன்று செவ்வாய்க்கிழமை (18) தனது 30 ஆவது வயதை நெருங்கிய நிலையில் உயிரிழந்துள்ளது.
தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்தின் தகவலின்படி, உயிரிழந்த ஒட்டகச்சிவிங்கிக்கு முன்னதாக குறிப்பிட்ட எந்தவொரு நோயும் கண்டறியப்படவில்லை.
ஆரம்பகட்ட அவதானிப்புகளின் அடிப்படையில், வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட இயற்கையான காரணங்களால் அது உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும், உயிரிழப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்துவதற்காக இன்று (19) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
பொதுவாக, ஒட்டகச்சிவிங்கிகள் இயற்கைச் சூழலில் சுமார் 20 முதல் 25 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. எனினும், கட்டுப்படுத்தப்பட்ட மிருகக்காட்சிசாலைச் சூழலில் அவை இதைவிட நீண்ட காலம் உயிர்வாழக்கூடியவை என தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்தின் விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ், மேலும் இரண்டு ஜோடி ஒட்டகச்சிவிங்கிகளை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2026ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் இரண்டு புதிய ஜோடி ஒட்டகச்சிவிங்கிகள் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை மேம்படுத்துவதற்கும் இந்த விலங்கு பரிமாற்றத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM