(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
சிரானி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக நியமித்தது தவறு. ராஜபக்ஷர்களுக்கு சார்பாக அவர் செயற்படாத காரணத்தால் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதுவும் தவறு.ராஜபக்ஷர்களை போலவே இந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்களும் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார்கள். 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றி அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற நிதிச் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் நாட்டுக்கும், நாட்டின் எதிர்காலத்துக்கும் பாரதூரமான வகையில் விளைவுகளை ஏற்படுத்தும் திருத்தமாகும்.22 ஆம் திருத்தம் கறுப்பு பேய் அல்ல என்று நீதியமைச்சர் குறிப்பிடுகிறார். சிம்பாபே நாட்டில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டவுடன் அங்கு கறுப்பு பேய் எவ்வாறு உருவானது என்பதை ஒரு மாதத்துக்கு முன்னரே நீதியமைச்சருக்கு எடுத்துரைத்தோம்.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் வெளிப்படையான வகையில் முன்னெடுக்கவில்லை. இரகசியமான முறையில் தான் சகல நகர்வுகளும் முன்னெடுக்கப்பட்டன.சட்டத்தின் பிரகாரம் தான் இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். கடந்த கால அரசாங்கங்களும் அரசியலமைப்பு திருத்தங்கள் ஊடாகவே ஜனநாயக விரோத செயற்பாடுகளை முன்னெடுத்தது.
ராஜபக்ஷர்களும் இவ்வாறே ஜனநாயக விரோதமாக செயற்பட்டார்கள். சிரானி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக நியமித்தது தவறு. ஜி.எல். பீரிஸின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே அவர் நியமிக்கப்பட்டார். ராஜபக்ஷர்களுக்கு சார்பாக அவர் செயற்படாத காரணத்தால் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.அதுவும் தவறு.
ராஜபக்ஷர்கள் பதவியில் இருக்கும் போது தான்தோன்றித்தனமாக செயற்பட்டார்கள். ஜனநாயகத்துக்கு விரோதமாக செயற்பட்டார்கள். இந்த அரசாங்கமும் அவ்வாறே செயற்படுகிறது.
ராஜபக்ஷர்கள 20 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருப்பார்கள். அதனைத் தொடர்ந்து அவர்களின் பரம்பரை ஆட்சியில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டது, ஆனால் இரண்டு ஆண்டுக்குள் மக்கள் அவர்களை விரட்டியடித்தார்கள்.22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினால் அதன் விளைவை எதிர்க்கொள்ள அரசாங்கம் தயாராக வேண்டும் என்றார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM