கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் மஹீல் சேனரத்னவுக்கு விளக்கமறியல்

Published By: Vishnu

19 Aug, 2026 | 03:06 AM
image

(செ.சுபதர்ஷனி)

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னவின் சகோதரரும், மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருமான மஹீல் சேனரத்னவை நேற்றைய  தினம் (18) கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுவிக்கப்பட்ட போதும் பிணை நிபந்தனை நிபந்தனைகளை  உரியவாறு பூர்த்தி செய்யப்படாமையால், சந்தேகநபரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை (18) கொழும்பு பிரதம நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ரஜித  சேனரத்னவின் சகோதரரான மஹீல் சேனரத்ன, 2010 - 2012 காலப்பகுதியில் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். இக்காலகட்டத்தில், ஊழல் குற்றச்சாட்டின்கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை  ஆணைக்குழு அதிகாரிகளால்  செவ்வாய்க்கிழமை (18) காலை  மேற்படி சந்தேகநபர்  கைது செய்யப்பட்டார். 

நாடு முழுவதிலும் உள்ள மீன் விற்பனை நிலையங்களைக் நிர்மாணித்தல் மற்றும் புனரமைத்தல் நடவடிக்கைகளின் போது, உரிய கொள்முதல் நடைமுறையை  பின்பற்றாது, நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நிறுவனங்களுக்குப் பணிகளை வழங்கியமை மற்றும் அந்நிறுவனங்களுக்குக் கொடுப்பனவுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கமை  சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்தது.

கைதான  சந்தேகநபர், கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, இரு தரப்பினரால் மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலனை செய்த நீதிவான்  சந்தேகநபர் வெளிநாடு செல்ல பயனத்தடை விதித்திருந்ததோடு,  சந்தேகநபரை  தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளில் விடுவிப்பதாக உத்தரவு பிறப்பித்தார். எனினும் சந்தேகநபரான மஹீல் சேனரத்ன  பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யதவரிய நிலையில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜனாதிபதியின் கூற்றில்...

2026-09-08 14:55:10
news-image

2029இல் அநுர, குமார் குணரத்தினம், சீலரத்ன......

2026-09-08 15:49:13
news-image

அதிவேகமாக ஜனநாயகத்தை அழித்து வருகிறது அரசு...

2026-09-08 16:17:06
news-image

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை...

2026-09-08 16:28:53
news-image

பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு...

2026-09-08 16:31:25
news-image

ஜனாதிபதியும் 159 உறுப்பினர்களும் மட்டுமே சுபீட்சமாக...

2026-09-08 16:48:21
news-image

ஆயுதமோதலின்போது இடம்பெற்ற மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை!...

2026-09-08 19:09:11
news-image

ஜனாதிபதியின் தலைமையில் அரச இலக்கிய விருது...

2026-09-08 21:31:51
news-image

சுருக்குவலை மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரம் ஒரே...

2026-09-08 18:00:08