தமது புதிய அரசியல் கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் மைத்ரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் மைத்ரி குணரத்ன புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (12) நடைபெற்றது. அதில் பேசியபோதே மைத்ரி இத்தகவலை வெளியிட்டார்.
“எங்கள் புதிய கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும். இதற்கான ஆரம்ப வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டோம். இப்போது, கட்சிக்கான தொண்டர்களைச் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
“ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும்போது கட்சியினுள் மறுமலர்ச்சி ஏற்பட முயற்சி செய்தேன். எனினும், எனது முயற்சியால் உறுப்பினர் பதவியை இழந்தேன். எனது புதிய கட்சி மூலம் அரசியலிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, நாட்டின் மூன்றாவது பெரும்பான்மைக் கட்சியாக உருவெடுக்கத் திட்டமிட்டுள்ளேன். எனது கொள்கைகளை விரும்பும் எவருக்கும் இந்தக் கட்சியில் இடமுண்டு.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM