மக்களின் ஜனநாயக உரிமைகளைத் திருட இடமளியோம் - ரணில் விக்ரமசிங்க

Published By: Digital Desk 3

16 Aug, 2026 | 08:33 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அண்மையில் இரண்டு முறை அவசரமாகக் கூடி நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் கட்சியை மறுசீரமைக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து தீவிரமாக கலந்துரையாடியது.

இக்கூட்டங்களின் போது உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, நாட்டில் தற்போது சுமார் பதினொரு இலட்சம் வழக்குகள் தேங்கிப்போயுள்ளதாகவும், இவற்றில் பெரும்பாலானவை நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மேல் நீதிமன்றங்கள் அல்லது மாவட்ட நீதிமன்றங்களிலேயே அதிகப்படியான வழக்குகள் தேங்கியுள்ளன.  நாட்டில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவாக முடிப்பதாக இருந்தால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு இலட்சம் வழக்குகளையாவது விசாரித்து முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும், இவ்வாறான பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்வதற்குப் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று அவசியமாகும்  என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்க அரசாங்கம் முடிவெடுத்திருந்தால் அதற்காக மக்கள் தீர்ப்பைப் பெற வேண்டியது கட்டாயமாகும் எனக் கூறியதுடன், இது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் தங்களால் கலந்துரையாடப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் தமக்கு தனிப்பட்ட நபர்கள் மீது எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், தங்களது போராட்டம் கொள்கை ரீதியானது மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

நாட்டு மக்களின் உரிமைகளை மக்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், மக்களின் அந்த ஜனநாயக உரிமைகளை யாராவது திருட முற்பட்டால் அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்க முடியாது என உறுதியாகத் தெரிவித்தார். இக்கூட்டங்களின் போது ஐக்கிய தேசியக் கட்சியைப் புதிய பொலிவுடன் மறுசீரமைத்து, எதிர்வரும் அரசியல் சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் கட்சியின் அமைப்புகளைப் பலப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10