(லியோ நிரோஷ தர்ஷன்)
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அண்மையில் இரண்டு முறை அவசரமாகக் கூடி நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் கட்சியை மறுசீரமைக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து தீவிரமாக கலந்துரையாடியது.
இக்கூட்டங்களின் போது உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, நாட்டில் தற்போது சுமார் பதினொரு இலட்சம் வழக்குகள் தேங்கிப்போயுள்ளதாகவும், இவற்றில் பெரும்பாலானவை நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மேல் நீதிமன்றங்கள் அல்லது மாவட்ட நீதிமன்றங்களிலேயே அதிகப்படியான வழக்குகள் தேங்கியுள்ளன. நாட்டில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவாக முடிப்பதாக இருந்தால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு இலட்சம் வழக்குகளையாவது விசாரித்து முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும், இவ்வாறான பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்வதற்குப் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்க அரசாங்கம் முடிவெடுத்திருந்தால் அதற்காக மக்கள் தீர்ப்பைப் பெற வேண்டியது கட்டாயமாகும் எனக் கூறியதுடன், இது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் தங்களால் கலந்துரையாடப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் தமக்கு தனிப்பட்ட நபர்கள் மீது எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், தங்களது போராட்டம் கொள்கை ரீதியானது மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
நாட்டு மக்களின் உரிமைகளை மக்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், மக்களின் அந்த ஜனநாயக உரிமைகளை யாராவது திருட முற்பட்டால் அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்க முடியாது என உறுதியாகத் தெரிவித்தார். இக்கூட்டங்களின் போது ஐக்கிய தேசியக் கட்சியைப் புதிய பொலிவுடன் மறுசீரமைத்து, எதிர்வரும் அரசியல் சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் கட்சியின் அமைப்புகளைப் பலப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM