இன்றைய சூழலில் எம்மில் ஒவ்வொருவரும் தங்களது கடின உழைப்பிற்கு தற்போது கிடைத்துவரும் பலனை விட கூடுதலான பலன்களை எதிர்பார்ப்பது இயல்பு.
அதே தருணத்தில் புத்திசாலித்தனத்தின் மூலமாகவே இன்றைய வாழ்வாதாரத்தை மேற்கொள்ளும் இளைய தலைமுறையினர் குறைவாகவும், நுட்பமாகவும் உழைத்தால், அதன் மூலமாக கிடைக்கும் பலன் மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து உழைத்து வருகிறார்கள்.
ஆனால் இவர்கள் இருவருக்கும் அதிர்ஷ்டம் என்பது அளவாகத்தான் இருக்கிறது. இதனை மேம்படுத்திக் கொள்ளவும், அதனூடாக பலனை பெற்றுக் கொள்ளவும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில வண்ணங்களை தொடர்ந்து பாவித்தால், அதிர்ஷ்டம் கிடைக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
அத்துடன் ஒவ்வொரு ராசியினருக்கான வண்ணங்களையும் பட்டியலிட்டு சொல்லி இருக்கிறார்கள். அதை தொடர்ந்து காண்போம்.
பொதுவாக இந்த வண்ணத்திலான கைக்குட்டைகளை எப்போதும் உடன் வைத்திருப்பது சிறந்த பலனை தரும்.
ஆனால் அவை பாவிப்பதற்கு சிறந்ததாக இருக்க வேண்டும். அழுக்கு அடைந்ததாகவோ கிழிந்ததாகவோ இருக்கக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- மேஷம்- சிவப்பு
- ரிஷபம் - வெண்மை, ஓரஞ்சு
- மிதுனம் - பச்சை
- கடகம் - வெண்மை, மஞ்சள்
- சிம்மம் - வெளீர் ஒரஞ்சு
- கன்னி - பச்சை
- துலாம் - பட்டு கலந்த வெண்மை
- விருச்சிகம் - வெளீர் சிவப்பு
- தனுசு - சந்தன நிறம்
- மகரம் -நீலம்
- கும்பம் -நீலம்
- மீனம் - மஞ்சள்
இந்த வண்ணத்திலான கைக்குட்டையை பாவிப்பதற்கு சங்கடம் உள்ளவர்கள் இந்த வண்ணத்திலான கயிறுகளை வலது கையில் கட்டிக் கொள்ளலாம். அப்படி செய்தாலும் அதிர்ஷ்ட பலன் கிடைக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM