(நா.தனுஜா)
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் உபகுழுவின் இலங்கை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (14) ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் உபகுழுவினால் புதன்கிழமையிலிருந்து (12) எதிர்வரும் 27 ஆம் திகதி வரை கட்டார், இலங்கை, லிதுவேனியா, சிலி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளில் மாற்றுத்திறனாளிகளின் நிலைவரம் தொடர்பில் மீளாய்வு செய்யப்படவுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள 193 அங்கத்துவ நாடுகளில் மேற்குறிப்பிட்ட 5 நாடுகளும் உள்ளடங்குகின்றன.
அதற்கமைய இலங்கை தொடர்பில் வெள்ளிக்கிழமை (14) நடைபெறவிருக்கும் மீளாய்வின்போது சுயாதீன நிபுணர்கள் 18 பேரடங்கிய குழுவினரால் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கையை இலங்கை எவ்வாறு நடைமுறைப்படுத்துகின்றது?, உபகுழுவின் முன்னைய பரிந்துரைகள் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றன? என்பது பற்றி விரிவாக ஆராயப்படும்.
அதேவேளை இக்குழுவிடம் இலங்கை அரசாங்கம் மற்றும் ஏனைய அரச சார்பற்ற அமைப்புக்களின் அறிக்கைகளும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM