இலங்கை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான சிறப்புப் பிரதிநிதி மார்கரெட் செட்டர்வைட் கவலை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நீதித்துறையின் சுதந்திரத்துக்கும், அதன் மீதான பொதுமக்களின் நம்பிக்கைக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், தற்போதைய நீதிபதிகளின் பதவிக்காலத்தை மாற்றுவது நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்கத்துறையின் தலையீடு குறித்த கேள்விகளை எழுப்பக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், வெளிப்படையானதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான ஆலோசனை செயல்முறையின் ஊடாகவே ஓய்வுபெறும் வயதில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
இந்தத் திருத்தம் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையின் (ICCPR) 14(1) ஆவது பிரிவுக்கும், நீதித்துறை சுதந்திரம் தொடர்பான ஐ.நா. கொள்கைகளுக்கும் முரணாகும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM