பரிந்­து­ரை­களை ஏற்­க­வேண்­டிய கட்­டாயம் அர­சுக்கு கிடை­யாது

Published By: Priyatharshan

12 Oct, 2017 | 10:56 AM
image

இலங்கை வரு­கின்ற ஐக்­கி­ய ­நா­டு­களின் விசேட நிபுணர் பப்லு டி கிரிப் முன்­வைக்கும்  ஆலோ­ச­னை கள் மற்றும் பரிந்­து­ரை­களை ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டிய கட­மைப்­பாடு  இலங்கை அர­சாங்­கத்­திற்கு இல்லை. அவர்­களின் அனு­பவ ஆலோ­ச­னை­க­ளை யும் விட­யங்­க­ளையும் அர­சாங்கம்  தேவை ஏற்­படின் ஒரு வள­மாக பயன்­ப­டுத்­தலாம் என்று அர­சாங்கம் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­தி­ருக்­கின்­றது. 

உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள ஐக்­கி­ய­நா­டு­களின்  உண்மை,நீதி, நட்­ட­ஈடு மற்றும்  மீள் நிக­ழா­மையை ஊக்­கு­விப்­ப­தற்­கான விசேட நிபுணர் பப்லு டீ கிரீப் தொடர்­பாக   விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே வெளி­வி­வ­கார அமைச்சு மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருக்­கின்­றது. 

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:-

ஏனைய நாடு­களைப் போன்று இலங்­கைக்கும்  குறித்த  ஐக்­கிய நாடு­களின் விசேட நிபு­ணர்­களின் ஆலோ­ச­னை­க­ளையும் பரிந்­து­ரை­க­ளையும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும் என்ற  கட­மையோ பிணைப்போ கிடை­யாது.

நிறு­வன ரீதி­யான  கட்­டி­யெ­ழுப்­பு­தல்கள், கொள்கை உரு­வாக்­கங்கள், கொள்கை மறு­ சீ­ர­மைப்­புக்கள், பயிற்­சிகள் போன்­ற­வற்­றுக்கு தேவை­யானால்  ஐ.நா. விசேட நிபு­ணர்­களின் ஆலோ­ச­னை­களை நாம் பரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தலாம்.  

இலங்கை அர­சாங்­கத்தின் அழைப்­பின்­பே­ரி­லேயே ஐக்­கி­ய­ நா­டு­களின்  உண்மை,நீதி, நட்­ட­ஈடு மற்றும்  மீள் நிக­ழா­மையை ஊக்­கு­விப்­ப­தற்­கான விசேட நிபுணர் பப்லு டீ கிரீப்  இலங்கை வந்­தி­ருக்­கின்றார்.  

அவர்  இலங்­கையில்  10 ஆம் திகதி முதல் 23ஆம் திக­தி­வரை  தங்­கி­யி­ருப்பார். இந்த விஜ­யத்­தின்­போது ஐ.நா. விசேட பிர­தி­நிதி   அமைச்­சர்கள்,  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், அரச உயர்­மட்ட அதி­கா­ரிகள், மாகா­ண­மட்ட அதி­கா­ரிகள், சிவில் சமூக பிர­தி­நி­திகள், மதத் தலை­வர்கள், கல்­வி­யா­ளர்கள்,  இலங்­கை­யி­லுள்ள சர்­வ­தேச சமூக பிர­தி­நி­திகள் ஆகி­யோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வி­ருக்­கின்றார்.  

அத்­துடன்  அவர் திரு­கோ­ண­மலை, மன் னார், அனு­ரா­த­புரம், யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, கண்டி, மாத்­தறை, ஆகிய பகு­தி­க­ளுக்கும் விஜயம்  செய்து நிலை­மை­களை ஆராய்வார்.  

ஐ.நா.பிர­தி­நிதி யாழ்ப்­பா­ணத்­திலும் கொழும்­பிலும்  சிறப்பு சொற்­பொ­ழிவு ஆற்­ற­வுள்­ள­துடன்  விஜ­யத்தின் இறு­தியில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­திப்பார். 

இலங்கை தொடர்­பான தனது அறிக்­கையை அவர்  ஐக்­கி­ய­நா­டுகள்   மனித உரிமை பேர­வையில் அடுத்த  வருடம் செப்­ 

டெம்பர் மாதம்  சமர்ப்­பிப்­பார்.  அவர் அறிக்­கையில்  மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பித்த பின்னர்  அவற்றை  கருத்தில் கொள்ள வேண்­டுமா என்­பது குறித்து  இலங்கை அர­சாங்­கமே தீர்­மானம் எடுக்கும்.  

அது தொடர்பில்  அர­சாங்­கமே தீர்­மானம் எடுக்கும்  அவரின் பரிந்­து­ரைகள்   இலங்கை மக்­க­ளுக்கு   பய­ன­ளிக்கும் வகையில் உள்­ள­ னவா என்­பதை அர­சாங்­கமே தீர்­மா­னிக்கும். 

பப்லு டீ கிரீப் ஐக்­கி­ய­நா­டு­களின் ஒரு சுய­ாதீன நிபு­ண­ராவார். விசேட நிபு­ணர்கள்  ஆன­வர்கள்   நாடு­களின் மனித உரிமை நிலை­மை­களை மதிப்­பிட்டு  அறிக்­கை­யி­டு­வார்கள். பப்லு டீ கிரீப் உண்மை, நீதி, நட்­ட­ஈடு, மீள்­நி­க­ழாமை போன்­றவை தொடர்­பான   நிபு­ண­ராவார்.  இவை பொறுப்­புக்­கூறல்  பொறிமுறையின் முக்கிய அம்சமாகும். 

அவருடைய ஆணையானது  அவருக்கு பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் நாடுகளுக்கு வழங்குவதற்கு   ஆணையளிக் கிறது. அவர் தனது பணியில் பாதிக்கப்பட் டோரை அடிப்படையாக கொண்ட  அணுகுமுறையை முன்னெடுப்பார்.  பாதிக்கப்பட்டோர் எனும்  போது அது ஒரு சமூகமல்ல. அது  பாதிக்கப்பட்ட அனைவ ரையும்  குறிப்பிட்டு கூறுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-06-22 06:20:32
news-image

தம்பலகாமம் கண்டி திருகோணமலை 98ம் கட்டை...

2025-06-22 00:57:55
news-image

யாழில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்...

2025-06-22 00:54:56
news-image

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று...

2025-06-22 00:22:48
news-image

நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி...

2025-06-21 12:54:28
news-image

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-06-21 21:27:01
news-image

பொது மன்னிப்பினை இரத்து செய்வதற்கு அரசாங்கம்...

2025-06-21 13:16:18
news-image

மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு எதிராக...

2025-06-21 20:40:23
news-image

இலஞ்சம் பெற்றதற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ...

2025-06-21 20:01:07
news-image

மோசடியான முறையில் தேசிய மக்கள் சக்தி...

2025-06-21 15:05:15
news-image

மோதல் நிலைமை தனியும் வரை இஸ்ரேலுக்கு...

2025-06-21 17:09:55
news-image

பதுளை - துன்ஹிந்த வீதியில் பஸ் ...

2025-06-21 21:07:22