ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியமையை தாம் வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பாராளுமன்ற உரை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 28 ஆம் திகதி பாராளுமனறத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரையினை கேட்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்காமல் போனது. அந்த நேரத்தில் அரசியல் செயற்பாடொன்றுக்காக நான் கொழும்பிலிருந்து வெளிபிரதேசம் ஒன்றுக்கு செல்ல வேண்டிய கட்டாய நிலையினாலேயே அந்த சந்தர்ப்பம் தவறிவிட்டது.
ஆனால் அந்த உரையை தொலைக்காட்சி செய்தியில் கேட்டபோது அவர் பிரதமராக மட்டுமல்லாது சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் அளவிற்காவது ஏற்றுக்கொள்ள முடியாத நபர் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது.
அதேபோல் நாட்டில் ஏற்பட்ட புரட்சிக்கு பங்களிப்புச் செய்த ஊடகவியலாளர் சுதந்திரமாக செயற்படலாம் என்ற விதத்திலும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளி யிடுபவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் என்ற கோணத்திலுமே பிரதமரின் மேற்படி உரை அமைந்துள்ளது.
அதேபோல் பிரதமரின் இந்த உரை நாட்டில் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டுவதற்கான அடித்தளமாக அமைந்துள்ளதே தவிர பிரதமர் தொடர்ந்தும் கூறுவது போன்று ஐக்கியபாட்டுடனான ஆட்சிக்கோ அல்லது ஜனநாயக ஆடசிக்கோ இந்த உரை வழிசெய்யாது.
அதனால் தனது புகழை பாடுபவர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கும் எதிர்ப்ப வர்களை அச்சுறுத்துவதற்கும் பெயர்தானா நல்லாட்சி என்ற வினாவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பகிரங்கமாக வினவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தனது நிலைப்பாட்டுக்கு மாறான நிலை ப்பாட்டினை உடைய ஊடகவியலாளர்களை தறவான வார்த்தை பிரயோகங்களால் திட்டுவது பிரதமருக்குரிய பண்பல்ல என்பது பிரதமருக்கு புரியாமல் இருப்பது வருத்தத்திற்குரியதாகும். ஊடகவியலா ளர்கள் தாம் கூறும் கருத்துகள் குறித்து தீர்க்க மாக ஆராய்ந்து குறிப்பிடுவர். அவ்வாறான ஊடகங்களை பிரதமர் அச்சுறுத்துவதால் இனி அவர்களிடமிருந்தும் உண்மையான விடயங்களை எதிர்பார்ப்பது கடினமான விடயமாகிவிடும்.
ஊடகவியலாளர்களுக்கு இருந்த ஓரளவு சுதந்திரத்தையும் முழுமைாக பறித்துக் கொண்டுள்ள பிரதமருக்கு எதிராக நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும் என தெரி வித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM