திவுலபெலஸ்ஸ, தேதுணு விவசாயக் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் 88 இலட்சம் ரூபா பெறுமதியான விதை நெல் உற்பத்தி இயந்திரம் ஞாயிற்றுக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது.
விவசாயிகளின் உற்பத்திகளுக்கு மேலதிக பெறுமதி சேர்ப்பதுடன், அவர்களின் வருமான வழிகளை வலுப்படுத்தவும், உள்நாட்டு விவசாயத்தை நவீன தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகளுடன் முன்னெடுத்துச் செல்லவும் இத்தகைய திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என இதன்போது தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதுடன், அவர்களின் விளைபொருட்களுக்கு சந்தையில் அதிக பெறுமதியை பெற்றுக்கொடுப்பதற்கும் இந்த விதை நெல் உற்பத்தி இயந்திரம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாய மக்களின் பங்களிப்புடனும் கூட்டுறவு இயக்கத்தின் ஒற்றுமையுடனும் கடந்த 20 ஆண்டுகளாக செயற்பட்டு வரும் தேதுணு கூட்டுறவுச் சங்கத்தின் பயணம் பாராட்டத்தக்கது எனவும் நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
விவசாயத் துறையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தி செயன்முறைகளை மேம்படுத்துவதுடன், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர், ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல, மஹியங்கனை பிரதேச சபைத் தலைவர், கூட்டுறவு அதிகாரிகள் மற்றும் தேதுணு கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM