அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் ஒன்றோடொன்று மோதும் ஆபத்தான சூழ்நிலையிலிருந்து நூலிழையில் தப்பியுள்ளன.
இச்சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோல்ட் கோஸ்ட் நோக்கிப் புறப்படத் தயாராக ‘டாக்ஸிவேயில்’ சென்று கொண்டிருந்த ஜெட்ஸ்டார் எயார்பஸ் ஏ320 விமானத்திற்கு முன்னால், இழுவை வாகனம் மூலம் இழுத்துச் செல்லப்பட்ட கட்டார் ஏர்வேஸ் போயிங் 777 குறுக்கே வந்துள்ளது.
நிலமையை உணர்ந்த இரு விமானங்களின் கட்டுப்பாட்டாளர்களும் விமானங்களை உடனடியாகத் திடீரென நிறுத்தினர்.
ஜெட்ஸ்டார் விமானம் திடீரென பிரேக் அழுத்தப்பட்டதால், அதில் இருந்த விமானப் பணிப்பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
பாதிப்புக்குள்ளான ஜெட்ஸ்டார் விமானத்தின் பயணம் இரத்து செய்யப்பட்டு, பயணிகள் மாற்று விமானங்களுக்கு மாற்றப்பட்டனர்.
கட்டார் ஏர்வேஸ் விமானத்தின் முன் சக்கரப் பகுதிக்கும், அதனை இழுத்துச் சென்ற இழுவை வாகனத்திற்கும் இடையிலான இணைப்புப் பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது.
விமானக் கட்டுப்பாட்டு மையத்தின் வழிகாட்டல்களின் படியே தங்கள் விமானி செயல்பட்டார் எனவும், மற்றொரு விமானம் மிக அருகில் வந்ததால் அவசரமாக பிரேக் பயன்படுத்தப்பட்டதாகவும் ஜெட்ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியக அதிகாரிகள் விமானப் பணியாளர்கள், இழுவை வாகன ஓட்டுநர்கள், விமானக் கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருவதுடன், சிரிரிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
சிட்னி விமான நிலையத்தில் அண்மையில் ஏற்பட்ட விமானக் கட்டுப்பாட்டு மையப் பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் கடந்த ஜூலை மாதம் 27 ஆம் திகதி அன்று குவாண்டாஸ் விமானங்களுக்கு இடையே ஏற்பட்ட இதுபோன்ற மற்றொரு விபத்துத் தவிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM