கனடா தமிழாழி பேரவையினால் நடாத்தப்பட்ட தொடர்ச்சியான 100 மணித்தியால முத்தமிழ் உலக சாதனையில் பங்கேற்று முத்திரை பதித்த இலங்கைத் தமிழ் கலைஞர் சங்க உறுப்பினர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கும் பிரம்மாண்ட விழா நாளை நடைபெறவுள்ளது.
இவ்விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (09) மாலை 3:45 மணிக்குக் கொழும்பு-11, ஐந்துலாம்புச் சந்தியில் அமைந்துள்ள பழைய நகர சபை மண்டபத்தில் இலங்கைத் தமிழ் கலைஞர் சங்கத்தின் தலைவர் கலைமாமணி பொன். பத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.
கனடா தமிழாழி பேரவை நடாத்திய தந்தையர் தின விழாவை முன்னிட்டு, தொடர்ச்சியாக 100 மணித்தியாலங்கள் நடைபெற்ற இயல், இசை, நாடக முத்தமிழ் உலக சாதனை நிகழ்வில் இலங்கைத் தமிழ் கலைஞர் சங்க உறுப்பினர்கள் பலர் பங்குபற்றித் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். அவர்களின் இச்சாதனையைக் கௌரவிக்கும் வகையிலேயே இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்களான கே.டி. குருசாமி, பழ புஷ்பநாதன் மற்றும் வைத்தமாநிதி, தேசபந்து திருமதி கெளசல்யா கோவிந்தபிள்ளை, 'கலைத் தங்கம்' தாஜ்மஹான் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கைக் கலைஞர்களின் அகில உலக சாதனையை வாழ்த்தி மகிழக் கலை அபிமானிகள், கலைஞர்கள், ஆன்மீகவாதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அன்போடு அழைப்பதாகச் சங்கத்தின் தலைவர் கலைமாமணி பொன். பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்விற்கான அனுமதி முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்து.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM