நாட்டு மக்களின் பிரச்சினைகளை பொருட்படுத்தாமல் அரசாங்கத்தில் உள்ள 30 பேர் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ள கனவு காண்பதாக பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம்சுமத்தினார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள பொது பல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநா ட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் தற்போது அரசியல் ரீதியாக பல பிரச்சினைகளும் ஆபத்துக்களும் உள்ளன. நாட்டு பிரச்சினையை பார்க்கிலும் அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் அதிகம் உள்ளன.. நாட்டில் பிரச்சினை என்ன நடந்தாலும் அதனை பொருட்ப்படுத்தாமல் சிலருக்கு பிரதமர் கனவு உள்ளது. அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன உள்ளிட்ட 30 பேர் பிரதமர் கனவுடன் உள்ளனர்.
நாடு குழிதோண்டி புதைக்கப்படுகின்றது. ஆனால், இவர்கள் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர். பொது எதிரணியும் குறுந்திரைப்படமொன்றை திரையிட்டு வருகின்றது. அரசியல்வாதிகளே நாட்டுக்கு பிரச்சினையை கொண்டு வந்துள்ளனர். நாம் தற்போது ஆபத்தான நிலைமையில் உள்ளோம்.
அரச சார்பற்ற அமைப்பினருக்கு குடும்பங்கள் இல்லை. பிள்ளைகளும் இல்லை. எனினும் தற்போது அரச நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் அவர்களேயாவர்.
இலங்கையின் 70 வருட அரசியல் வரலா ற்றை பார்க்கும் போது ஆட்சியாளர்களின் இயலாமை தெட்டத்தெளிவாக விளங்குகின்
றது. ஒரு கொள்கை அரசியல்வாதிகளுக்கு கிடையாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM