புதிய அர­சி­ய­ல­மைப்பை ஆத­ரிக்கும் உறுப்­பினர் ஒரு­வ­ருக்கு 300 மில்­லியன்

Published By: Robert

11 Oct, 2017 | 12:06 PM
image

பிர­பா­கரன் போரின் மூலம் பெற்­றுக்­கொள்ள முடி­யாமல் போனதை சட்ட ரீதி­யாக பெற்றுக் கொடுக்கும் நட­வ­டிக்­கைகள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இத­ன­டிப்­ப­டையில் புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு ஆத­ர­வாக கையு­யர்த்தும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு தலா 300 மில்­லி­யனை வழங்­கு­வ­தற்கு புலம்­பெயர் தமிழ் பிரி­வி­னை­வா­திகள் தீர்­மா­னித்­துள்­ள­தாக ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர தெரி­வித்தார்.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தை கையாளும் ஜயம்­பதி விக்­ர­ம­ரட்ன ஒரு சமஷ்டி ஆர்­வலர். மறு­புறம் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் எம்.ஏ. சுமந்­திரன் விடு­தலை புலி­களின் அர­சியல் சிந்­த­னை­யாளர். இவர்கள் உரு­வாக்கும் அர­சி­ய­ல­மைப்பு எவ்­வாறு இருக்கும் என்­பதை நாட்டு மக்கள் உணர வேண்டும் எனவும் குறிப்­பிட்டார். சர்­வ­தேச இலங்­கையர் பேர­வையின் விசேட ஊடக சந்­திப்பு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ராஜ­கி­ரி­யவில் இடம்­பெற்­றது. இதில் கலந்துகொண்டு உரை­யாற்றும்போதே ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் தொடர்ந்தும் கூறு­கையில் ,

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் இலங்கை தொடர்­பான பார­தூ­ர­மான அறிக்கை குறித்து அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் திருப்­தி­க­ர­மாக அமை­ய­வில்லை. நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தில் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள விட­யங்­களை குறித்த கால எல்­லைக்குள் முடித்து விட வேண்டும் என்ற நோக்கில்  நல்­லாட்சி அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது. 

குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பான சட்­ட­மூலம் மற்றும் அலு­வ­லகம் என்­பன சர்­வ­தே­சத்தின் நிகழ்ச்சி நிர­லுக்கு அமை­வா­கவே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இலங்கை தொடர்பில் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற குற்­றப்­பத்­தி­ரிகை இயற்கை நீதிக்கு முர­ணா­னது மாத்­தி­ர­மல்ல, அடிப்­ப­டை­தன்­மை­யற்­ற­து­மாகும்.

இலங்கை தொடர்­பி­லான போர்­குற்­றச்­சாட்­டு­களை மறு­த­லிக்கும் வகையில் சர்­வ­தேச குற்­ற­வியல் சட்­டங்கள் மற்றும் போர் குற்­றங்கள் தொடர்­பான 7 நிபு­ணர்கள் 7 அறிக்­கை­களை வெளி­யிட்­டி­ருந்­தனர். அதே போன்று ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் இலங்கை தொடர்­பான பார­தூ­ர­மான அறிக்கை   வெளி­யி­டப்­ப­டு­வ­தற்கு முன்னர் வெளி­வி­வ­கார அமைச்­சுக்கு அனுப்­பப்­பட்­டது. 

ஆனால் அர­சாங்கம் அந்த ஏழு அறிக்­கைகள் தொடர்­பா­கவோ குற்­றப்­பத்­தி­ரிகை தொடர்பாகவோ கவ­னத்தில் கொள்ளவில்லை. இத னால் நாட்­டிற்கு ஏற்­பட்ட விளை­வு­களும் ஆபத்­துக்­களும் அதி­க­மா­கின. ஜெனிவா தீர்மா­னத்­தினை நிறை­வேற்று­வதில் அர­சாங்கம் மும்­மு­ர­மாக உள்­ளது. நாட்­டிற்கு

எதி­ரா­னது என்று அறிந்தும் அர­சாங்கம் கருத்தில் கொள்ளவில்லை. விடு­தலை புலி­களின் தலைவர் பிர­பா­கரன் போரின் மூலம் பெற்­றுக்­கொள்ள முடி­யாமல் போனதை அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக பெற்றுக் கொடுக்கும் நட­வ­டிக்­கைகள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. 

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தை கையாளும் ஜயம்­பதி விக்­ர­ம­ரட்ன ஒரு சமஷ்டி ஆர்­வலர். மறு­புறம் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் எம்.ஏ சுமந்­திரன் விடு­தலை புலி­களின் அர­சியல் சிந்­த­னை­யாளர். இவர்கள் உரு­வாக்கும் அர­சி­ய­ல­மைப்பு எவ்­வாறு இருக்கும் என்­பதை நாட்டு மக்கள் உணர வேண்டும். 

வடக்கு, கிழக்கை ஒன்­றாக இணைத்து அதி கூடிய அதி­கா­ரத்­துடன் சமஷ்டி முறை­மை­யி­லான ஆட்­சியை முன்­னெ­டுப்­ப­தற்­கான விட­ய­தா­னங்கள் புதிய அர­சி­ய­ல­மைப்­

பிற்குள்  காணப்­ப­டு­கின்­றன. இதனை எந்தவழி­யி­லேனும் நிறை­வேற்றி விட வேண்டும் என்ற எதிர்­பார்ப்­புடன் சர்­வ­தே­சத்தில் உள்ள தமிழ் பிரி­வி­னை­வா­திகள் செயற்­ப­டு­கின்­றனர்.  இதற்­காக உள்ளூர் அர­சி­யல்­வாதி­களை குறி­வைத்து நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்கப்­பட்டு வருகின்றன. அதாவது பாராளுமன் றத்தில் புதிய அரசியலமைப்பிற்கு ஆதரவாககையுயர்த்தும் பாராளுமன்ற உறுப்பினர்க ளுக்கு தலா 300 மில்லியனை வழங்குவதற்கு புலம்பெயர் தமிழ் பிரிவினைவாதிகள் தீர்மானித்துள்ளனர். 

எனவே நாட்டு மக்கள் இந்த விடயத் தில் அவதானத்துடன் செயற்பட வேண்டும். புதிய அரசியலமைப்பிற்கு ஆதரவாக செயற்படும் அனைவரும் பிரிவினைவாதிகளுக்கு துணைப்போகும் தேசத்துரோகிகளா கும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-02-15 06:15:28
news-image

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளி அணைக்கட்டு, நீர்ப்பாசன வாய்க்காலை...

2026-02-14 17:28:42
news-image

ஜிந்துப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

2026-02-14 23:02:50
news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; 32...

2026-02-14 23:03:48
news-image

வெளிநாட்டு இலங்கையர்களுக்கான e-BMD டிஜிட்டல் சேவை...

2026-02-14 17:08:26
news-image

வாகனம் மோதி காயமடைந்த சிறுத்தை குட்டியை...

2026-02-14 16:55:54
news-image

வவுனியா பொலிஸாரால் கணவன் மனைவி உட்பட...

2026-02-14 16:49:51
news-image

திருகோணமலை பட்டினத்தெரு கடலரிப்பை பாதுகாக்க மாநகர...

2026-02-14 17:29:08
news-image

மின்சாரக் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களின்...

2026-02-14 17:28:11
news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் - கிரிந்தே அஸ்ஸாஜி...

2026-02-14 17:08:53
news-image

"முழு நாடுமே ஒன்றாக": தேசிய போதைப்பொருள்...

2026-02-14 16:27:10
news-image

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் மற்றும் மழை...

2026-02-14 16:26:47