(செ.கவிஷனா)
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடங்கி நாட்டின் பல சிறைச்சாலைகளுக்கும் பரவியுள்ள பதற்றமான மற்றும் கலவரச் சூழல், அரசாங்கத்தின் சிறைச்சாலை நிர்வாகத் திறன் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில், பிரச்சினைகளுக்குப் பொறுப்பேற்று தீர்வு காண வேண்டிய அரசாங்கம், வழக்கம்போல் எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது கண்டிக்கத்தக்கது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (7) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக் காரியாலயத்தில் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஆரம்பமாகி, தற்போது நாட்டின் பல சிறைச்சாலைகளுக்கும் பரவியுள்ள பதற்றமான மற்றும் கலவரச் சூழலானது, தற்போதைய அரசாங்கத்தின் முழுமையான நிர்வாகத் தோல்வியையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு முக்கியத்துறையைக் கூட முறையாக நிர்வகிக்கத் திறமையற்ற அரசாங்கம், எழும் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளைக் காண்பதை விடுத்து, வழக்கம் போல் எதிர்க்கட்சிகள் மீது பழிபோடும் போக்கைக் கடைப்பிடிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
குறிப்பாக, சிறைச்சாலைகள் அமைச்சருக்கு எதிராகச் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்த பின்னணியில், திறமையற்ற ஒரு அமைச்சரைக் காப்பாற்ற முற்பட்டதன் விளைவைத்தான் இன்று ஒட்டுமொத்த நாடும் அனுபவித்து வருகிறது. சிறைச்சாலைகளுக்குள் அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களின் சட்டவிரோத ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதன் காரணமாக, சிறைச்சாலைத்துறை அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் மிகுந்த அச்சத்திலும் பாதுகாப்பற்ற சூழலிலும் நாளாந்தம் வாழ்ந்து வருகின்றனர்.
சிறைக்குள் அரங்கேறும் இத்தகைய துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை வெளிநாட்டுச் சதி என்றோ அல்லது மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்தி மூடி மறைத்துவிட முடியாது எனவும், இது அரசாங்கத்தின் நேரடி இயலாமையையும் நிர்வாகத்திறன் இன்மையையும் உலகிற்குப் பறைசாற்றுகிறது என்றார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM