(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
சிறைச்சாலை கட்டமைப்பை பலவீனப்படுத்த ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான மோதல்களினால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. சிறைச்சாலை கட்டமைப்பை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற அமர்வின்போது சிறைச்சாலைகள் மோதல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து மஹர, வெலிகட மெகசின் , குருவிட்ட மற்றும் பள்ளன்சேன ஆகிய சிறைச்சாலைகளிலும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஆரம்பமான மோதல் தற்போது கட்டம் கட்டமாக வளர்ச்சிப் பெற்றுள்ளது.
கிடைக்கப்பெற்றுள்ள புலனாய்வுத் தகவல்கள் மற்றும் அறிக்கைகளுக்கு அமைய இவை திட்டமிட்டதொரு செயற்பாடு என்பதுடன், சிறைச்சாலை கட்டமைப்பை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் என்ற சந்தேகம் காணப்படுகிறது. போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மோதல்கள் தோற்றம் பெற்றுள்ளன.
நேற்று வியாழக்கிழமை (07) இரவு வெலிகட சிறைச்சாலையில் 10.15 மணியளவில் 40 பேர் ஒன்றிணைந்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.இந்த நிலைமையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கப்பட்டது.இந்த சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 2 கைதிகள் உயிரிழந்த நிலையில், 15 பேர் காயமடைந்து இரத்தினபுரி சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சிறைச்சாலைகளில் ஏற்படும் இவ்வாறான மோதல்களை கட்டுப்படுத்தும் போது கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய கவனம் செலுத்தியுள்ளோம்.
பள்ளன்சேன சிறைச்சாலையில் 30 இற்கும் மேற்பட்ட கைதிகள் காலை உணவுக்காக வெளியில் செல்ல அனுமதியளித்த போது அவர்கள் கட்டம் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சிறைச்சாலை கட்டமைப்பை பலவீனப்படுத்த ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான மோதல்களினால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்றார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM