சுவிஸ் அரசு நீதியான விசாரணையை நடாத்த வேண்டும் : எச்சிரிக்கும் கரனின் பிள்ளைகள்

Published By: Digital Desk 7

10 Oct, 2017 | 05:56 PM
image

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுவிஸ்லாந்தில் அகதிகள் முகாமில் சுட்டுக்கொல்லப்பட்ட முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவரின் வீட்டிற்கு இன்று சுவிஸ்லாந்து தூதரக அதிகாரி ஒருவர் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரகத்தின் வடக்கு, கிழக்கு பிராந்திய அரசியல் பிரிவு அதிகாரி சுஷாந்தினி கோபலகிருஷ்ணன் அவர்கள் நேரில் சென்று உயிரிழந்த குடும்பஸ்தரின் உறவுகளுடன் கலந்துரையாடியதோடு தனது ஆறுதலையும் தெரிவித்தார்.

அவர்களிடம் இது தொடர்பாக மேற்கொண்டு ஆறுதல் கூறிய சுஷாந்தினி,

“சுவிஸ்லாந்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர் தொடர்பில் இது வரையில் இலங்கை சுவிஸ் தூதரகத்திற்கு மேலதிக விடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை, குறித்த சம்பவம் தொடர்பாக சுவிஸ் அரசாங்கத்துடன் தொடர்பில் இருக்கின்றோம். இவ் விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஒழுங்கான முறையில் நடைபெறும். 

சுட்டுக் கொல்வது என்பது தவறு என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் பணிப்பின் பேரிலேயே நாம் இன்று சுட்டுக்கொல்லப்பட்டவரின் குடும்ப நிலைமைகளை நேரில் கண்டு ஆராய்வதற்காகவே வந்தோம். தந்தையை, சகோதரனை, கணவனை இழந்து தவிக்கும் உங்களின் வலிகளை புரிந்துகொள்கிறோம். உங்கள் நிலைமை தொடர்பில் சுவிஸ் அரசிற்கு அறிவிப்போம்” என உயிரிழந்தவர்களின் உறவுகளிடம் கூறினார்.

தூதரக அதிகாரியினை பார்த்து உயிரிழந்தவரின் உறவுகள் கதறி அழுது தமது வேதனையை வெளிப்படுத்தியதோடு சுட்டுக்கொல்லப்பட்ட தமது தந்தைக்கு உரிய பதிலை வழங்குமாறும் தமது தந்தையை சுவிஸ் பொலிஸார் சுட்டுக்கொன்றது ஏன் எனவும் சுட்டுக்கொல்லும் அளவிற்கு தமது தந்தை தவறு செய்திருக்க மாட்டார் எனவும் கொலை செய்யப்பட்டவரின் பிள்ளைகள் கதறி அழுதனர்.

மேலும் தமது தந்தை தொடர்பில் சுவிஸ் அரசு நீதியான விசாரணையை நடாத்த வேண்டும் எனவும் உயிரிழந்த தமது தந்தை தொடர்பாக நடக்கும் விசாரணைகளை தம் குடும்பத்தின் சார்பில் தாம் சுவிஸ் சென்று ஆராய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-06-22 06:20:32
news-image

தம்பலகாமம் கண்டி திருகோணமலை 98ம் கட்டை...

2025-06-22 00:57:55
news-image

யாழில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்...

2025-06-22 00:54:56
news-image

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று...

2025-06-22 00:22:48
news-image

நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி...

2025-06-21 12:54:28
news-image

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-06-21 21:27:01
news-image

பொது மன்னிப்பினை இரத்து செய்வதற்கு அரசாங்கம்...

2025-06-21 13:16:18
news-image

மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு எதிராக...

2025-06-21 20:40:23
news-image

இலஞ்சம் பெற்றதற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ...

2025-06-21 20:01:07
news-image

மோசடியான முறையில் தேசிய மக்கள் சக்தி...

2025-06-21 15:05:15
news-image

மோதல் நிலைமை தனியும் வரை இஸ்ரேலுக்கு...

2025-06-21 17:09:55
news-image

பதுளை - துன்ஹிந்த வீதியில் பஸ் ...

2025-06-21 21:07:22