இலங்கை - இந்திய உறவை வலுப்படுத்துவதில் வீரகேசரியின் பங்கு மகத்தானது - இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வாழ்த்து

Published By: Digital Desk 3

06 Aug, 2026 | 01:18 PM
image

வேக­மாக வளர்ந்து வரும் ஊடக கலா­சா­ரத்­துக்கு மத்­தியில், வீர­கே­சரி ஊட­க­வி­யலின் தர்மங்­க­ளுக்கும் கோட்­பா­டு­க­ளுக்கும் கட்­டுப்­பட்டு, மாறும் காலத்­துக்கு ஏற்ப தன்னைத் தக­வ­மைத்துக் கொண்டு செயல்­பட்டு வரு­கி­றது. ஊடக தர்மங்­களை உயர்த்திப் பிடிக்கும் அதேவேளையில், பல தசாப்­தங்­க­ளாகத் தொழில்­நுட்ப மற்றும் சமூக மாற்­றங்­களை ஏற்­றுக்­கொண்டு பய­ணிப்­பது சாதா­ரண சாத­னை­யல்ல என்று   இலங்­கைக்­கான இந்­திய உயர்ஸ்­தா­னிகர் சந்தோஷ் ஜா தனது வாழ்த்துச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார்.

வீர­கே­சரி பத்­தி­ரிகை தனது 96 ஆவது ஆண்டு விழாவை இன்று கொண்­டா­டு­கின்ற நிலையில் இந்­தி­யாவின் சார்பில் அதற் கு வாழ்த்து தெரி­வித்­துள்ள இந்­திய உயர்ஸ்­தா­னிகர் சந்தோஷ்  ஜா இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அதில் மேலும் அவர்  குறிப்­பிட்­டுள்­ள­தா­வது

இலங்­கையின் முன்­னணி தமிழ் நாளி­தழ்­களில் ஒன்­றான 'வீர­கே­சரி' தனது 96ஆவது ஆண்டு நிறைவைக் கொண்­டாடும் இந்த நன்­னாளில் எனது உள­மார்ந்த வாழ்த்­து­களைத் தெரி­வித்துக் கொள்­கி­றேன1930 ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்டு, 9 தசாப்­தங்­க­ளுக்கும் மேலாகத் தொடர்ந்து பய­ணித்து வரும் வீர­கே­ச­ரியின் இந்த மகத்­தான பயணம், இலங்கை ஊட­கத்­து­றையின் வர­லாற்றில் ஒரு முக்­கி­ய­மான மைல்­கல்­லாகும்.

ஆழ­மான, நடு­நி­லை­யான மற்றும் மனி­த­நே­ய­மிக்க ஊட­க­வி­யலை வளர்த்­தெ­டுக்கும் தனித்­து­வ­மான பொறுப்பு ஒரு செய்­தித்­தா­ளுக்கு உள்­ளது. உல­கெங்­கிலும் உள்ள ஊட­கத்­துறை ஒரு மாற்­றத்தை சந்­தித்து வரும் இக்­கா­லத்தில், இந்த பொறுப்பு எப்­போ­தையும் விட மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக மாறி­யுள்­ளது. தொழில்­நுட்ப வளர்ச்­சிகள் ஊட­க­வி­யலின் எல்­லையை விரி­வு­ப­டுத்தி, செய்­தி­களை சுவா­ரஸ்­ய­மாக வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான புதிய வழி­களைத் திறந்­து­விட்­டுள்­ளன. தக­வல்­களை வழங்­கு­வது மட்­டு­மன்றி, குரல்­களின் துடிப்பு, கொள்கை உறுதி மற்றும் பொது­நலன் சார்ந்த தள­ராத அர்ப்­ப­ணிப்பு ஆகி­ய­வற்­றில்தான் ஊட­க­வி­யலின் உண்­மை­யான பலம் அடங்­கி­யுள்­ளது. இந்த நிலை­யான குணங்­களே ஊட­கங்­களை ஒரு ஜன­நா­யக சமூ­கத்தின் தூண்­களில் ஒன்­றாகத் தொடர்ந்து உறு­திப்­ப­டுத்­து­கின்­றன.

வேக­மாக வளர்ந்து வரும் ஊடக கலாச்­சா­ரத்­துக்கு மத்­தியில், வீர­கே­சரி ஊட­க­வி­யலின் தரு­மங்­க­ளுக்கும் கோட்­பா­டு­க­ளுக்கும் கட்­டுப்­பட்டு, மாறும் காலத்­திற்கு ஏற்ப தன்னைத் தக­வ­மைத்துக் கொண்டு செயல்­பட்டு வரு­கி­றது. ஊடக தரு­மங்­களை உயர்த்திப் பிடிக்கும் அதே வேளையில், பல தசாப்­தங்­க­ளாகத் தொழில்­நுட்ப மற்றும் சமூக மாற்­றங்­களை ஏற்­றுக்­கொண்டு பய­ணிப்­பது சாதா­ரண சாத­னை­யல்ல. வர்த்­தகம், கலாச்­சாரம், சுற்­றுலா, சமயம் மற்றும் விளை­யாட்டு போன்ற துறை­களின் செய்திப் பதி­வுகள் மூலம் இந்­தியா மற்றும் இலங்கை மக்­க­ளுக்கு இடை­யி­லான உறவை வலுப்­ப­டுத்­து­வதில் இச்­செய்­தித்தாள் முக்­கிய பங்கு வகித்­துள்­ளது.

வீர­கே­சரி தனது ஆண்டு நிறைவைக் கொண்­டாடும் இந்த வேளையில், அதன் குறிப்­பி­டத்­தக்க பய­ணத்­திற்குப் பங்காற்றிய நிர்வாகம், ஊடகவியலாளர்கள், ஊழியர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வீரகேசரி தனது பாரம்பரியத்தின் அடுத்த கட்டப் பயணத்தைத் தொடங்கும் வேளையில், தொடர் வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன் என்றுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு...

2026-08-15 06:12:02
news-image

மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் உருவான அரசாங்கம்...

2026-08-15 06:01:04
news-image

வங்கி அதிகாரிகள், பொலிஸார் என நடித்து...

2026-08-15 05:57:44
news-image

வவுனியாவில் செஞ்சோலை படுகொலையின் 20ம் ஆண்டு...

2026-08-15 05:55:09
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா...

2026-08-15 05:47:55
news-image

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாகக் கூறிய பலரது...

2026-08-15 05:08:29
news-image

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தினால் அண்மைகாலமாக நாட்டில்...

2026-08-14 12:44:36
news-image

நீதித்துறையை அரசியலாக்க வேண்டாம் ; தைரியமிருந்தால்...

2026-08-14 16:54:24
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு வெளிநாடுகள்...

2026-08-14 14:28:23
news-image

எனது தந்தை ரோஹண விஜேவீரவின் படுகொலைக்கு...

2026-08-14 16:24:59
news-image

22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக...

2026-08-14 16:41:37
news-image

அரச அதிகாரிகள் அரசியல் அதிகாரத்துக்கும், செல்வாக்குக்கும்...

2026-08-14 16:53:28