(நா.தனுஜா)
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள இருதரப்பு ஒத்துழைப்பு முயற்சிகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்வருங்காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் வெளிவிவகார, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதன்கிழமை (5) நாட்டுக்கு வருகைதந்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் காலை கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள இருதரப்பு ஒத்துழைப்பு முயற்சிகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்வருங்காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமைச்சர் விஜித்த ஹேரத், 'இந்தச் சந்திப்பு இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் என்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM