(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பொலிஸ் மாஅதிபர் நடுவீதியில் அடித்து படுகொலை செய்யப்படுவார் என்று பொதுஜன பெரமனவின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ள கருத்து மிலேட்சத்தனமானது. இந்த கூற்றை அலட்சியப்படுத்த முடியாது. உரிய விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (5) நடைபெற்ற திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பொலிஸ் மாஅதிபர் நடுவீதியில் அடித்து படுகொலை செய்யப்படுவார் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ள கருத்து மிலேட்சத்தனமானது. இது தொடர்பில் தற்போது முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
பொலிஸ் மாஅதிபரின் தலைமைத்துவத்தில் போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதாளக் குழுக்களின் முக்கிய தரப்பினர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் கலக்கமடைந்துள்ளார்கள். பொதுஜன பெரமுன கட்சியும் இவ்வாறு கலக்கமடைந்திருக்கலாம். அதனையே அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
அரச அதிகாரிகள் சுயாதீனமாகவே செயற்படுகிறார்கள். எவ்வித அரசியல் தலையீடும் கிடையாது. பொதுஜன பெரமுனவின் ஆட்சியில் அவர்கள் எவ்வாறு பொலிஸ் சேவையை பயன்படுத்தினார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரது மிலேட்சத்தனமான கருத்தை அலட்சியப்படுத்தப் போவதில்லை. உரிய விசாரணைகளும், அதனைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த மிலேட்சத்தனமான கருத்தை அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் நியாயப்படுத்துகிறார். இதுவே இவர்களின் அரசியல் கலாசாரம் என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM