திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மோசடி: சபாநாயகர் விசாரணை நடத்த வேண்டும் – கயந்த கருணாதிலக

Published By: Digital Desk 3

05 Aug, 2026 | 05:38 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர்  மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்டமை குறித்து  முறையான விசாரணைகளை சபாநாயகர் முன்னெடுக்க  வேண்டும் என்று  அரசாங்க நிதி பற்றிய குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. ஆகவே இந்த மோசடி தொடர்பில் ஆராயும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உண்டு என  எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான  கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற அமர்வின்போது  திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர்  மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்டமை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

அவுஸ்ரேலிய ஏற்றுமதி நிறுவனத்துக்கு திறைச்சேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் சைபர் குற்றங்கள் ஊடாக மோசடி செய்யப்பட்டமையால் அரசுக்கு பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசாங்க நிதி பற்றிய  குழு இந்த மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் விடயதானத்துக்குட்பட்ட நிறுவனங்கள் குறித்து  விசேட கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு  பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

இந்த நிதி மோசடி குறித்து உரிய விசாரணைகளை  மேற்கொள்வதற்கு  சபாநாயகர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உள்ள காரணத்தால் இந்த மோசடி தொடர்பில் பாராளுமன்றம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டுள்ளதால் அரசுக்கு பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த  மோசடியைத் தொடர்ந்து நிதி அமைச்சின்  கட்டமைப்பின் பலவீனம் வெளிப்பட்டுள்ளது. ஆகவே இந்த மோசடி குறித்து முறையான விசாரணையை பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை...

2026-08-18 12:58:18
news-image

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு...

2026-08-18 15:28:30
news-image

அநுரவின் அரசியல் ஓய்வு கவலையளிக்கிறது -...

2026-08-18 16:08:39
news-image

ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான...

2026-08-18 16:10:11
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்வாக...

2026-08-18 16:21:31
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027...

2026-08-18 17:19:44
news-image

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் பயணிகள் ட்ரோன்...

2026-08-18 16:35:16
news-image

பாராளுமன்ற குண்டுத் தாக்குதலை நினைவுகூர்ந்து 22ஆம்...

2026-08-18 17:18:56
news-image

அமெரிக்காவின் வரி விதிப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்க...

2026-08-18 17:20:21
news-image

செம்மணி உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் மீதான சகல...

2026-08-18 17:37:41
news-image

மசகு எண்ணெய் விலை 80 டொலரில்...

2026-08-18 13:46:17
news-image

நாட்டை பிளவுபடுத்தும் 22ஆவது திருத்தம் ;...

2026-08-18 19:10:50