வெளிநாட்டு அரசமுறை கடன் செலுத்தல் அதிகாரங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க!

05 Aug, 2026 | 01:32 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

வெளிநாட்டு  அரசமுறை கடன் செலுத்தல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கும், நிதி அமைச்சுக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரம்  மற்றும் பொறுப்புக்கள் குறித்து மீள் பரிசீலனை  செய்ய வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளோம். சைபர் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு கொள்கை ரீதியில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள என  கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (05) நடைபெற்ற  திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர்  மோசடி செய்யப்பட்டமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

திறசேரியால் அவுஸ்ரேலிய நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்டமை சைபர் குற்றமாகும் என்று அரசாங்க நிதி பற்றிய குழு தெளிவாக அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில்,  அறிக்கையின் உள்ளடக்கத்தை திரிபுப்படுத்தும் வகையில்  எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை  முன்வைப்பது கவலைக்குரியது.

சைபர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உலகளாவிய ரீதியில் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் அரசியல்  நோக்கத்தை  அடிப்படையாகக் கொண்டு  குற்றச்சாட்டுக்களை மாத்திரம் குறிப்பிட முடியாது.   நாட்டின் நிதி கட்டமைப்பில் இதுவரை காலமும் காணப்பட்ட  பலவீனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன்  டொலர்  மோசடி குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் விரிவாக ஆராயப்பட்டு  பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 11 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு ஆகிய கட்டமைப்பில் காணப்படும்  பொதுவான குறைப்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அரசமுறை கடன் செலுத்தல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கும், நிதி அமைச்சுக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரம்  மற்றும் பொறுப்புக்கள் குறித்து மீள் பரிசீலனை  செய்ய வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளோம். சைபர் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு கொள்கை ரீதியில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு...

2026-08-15 06:12:02
news-image

மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் உருவான அரசாங்கம்...

2026-08-15 06:01:04
news-image

வங்கி அதிகாரிகள், பொலிஸார் என நடித்து...

2026-08-15 05:57:44
news-image

வவுனியாவில் செஞ்சோலை படுகொலையின் 20ம் ஆண்டு...

2026-08-15 05:55:09
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா...

2026-08-15 05:47:55
news-image

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாகக் கூறிய பலரது...

2026-08-15 05:08:29
news-image

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தினால் அண்மைகாலமாக நாட்டில்...

2026-08-14 12:44:36
news-image

நீதித்துறையை அரசியலாக்க வேண்டாம் ; தைரியமிருந்தால்...

2026-08-14 16:54:24
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு வெளிநாடுகள்...

2026-08-14 14:28:23
news-image

எனது தந்தை ரோஹண விஜேவீரவின் படுகொலைக்கு...

2026-08-14 16:24:59
news-image

22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக...

2026-08-14 16:41:37
news-image

அரச அதிகாரிகள் அரசியல் அதிகாரத்துக்கும், செல்வாக்குக்கும்...

2026-08-14 16:53:28