தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழக அரசின் நடப்பு நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.
தமிழக முதல்வராக ஜோசப் விஜய் கடந்த மே மாதம் பத்தாம் திகதி பதவியேற்றார். தமிழக வெற்றி கழகம் சில கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இக்கட்சியின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் தமிழக ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜட் கூட்டத்தொடர் இன்று (5) தொடங்கியது. இதற்காக தமிழக முதல்வர் விஜய் சட்டப்பேரவைக்கு வருகை தந்த போது அவரிடம் நிதி அமைச்சர் மரிய வில்சன் வாழ்த்து பெற்றார். இதைத்தொடர்ந்து நிதி அமைச்சரான மரிய வில்சன் நடப்பு நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதன் சிறப்பம்சங்கள்...
* பத்து லட்சம் கோடி கடன் உள்ள இக்கட்டான சூழலில் மாநிலத்தை நிதி நெருக்கடிகளில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* சிங்கப்பெண் திட்டம் - 200 அலகு இலவச மின்சாரம்- 717 மதுக்கடைகள் மூடல்- என பல்வேறு சாதனைகளை தமிழக அரசு செய்துள்ளது.
* மண்ணின் மகள் திட்டம்
* அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்.
* வெற்றி தொழில் முனைவோர் திட்டம்
* வெற்றி தமிழகம்
* மாவட்டம் தோறும் தாய் கேர் மையங்கள்
* மாநிலம் முழுவதும் நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள்
* ஆன்றோர் மேம்பாட்டு திட்டம்
* கிராமிய விளையாட்டுப் போட்டி திட்டம்
* அண்ணன் சீர் திட்டம்
* தமிழ்நாடு சுடர் திட்டம்
* புதிய தொழிற் பயிற்சி நிலையங்கள்
* தாய்மாமன் தங்க மோதிர திட்டம்
என பல்வேறு புதிய திட்டங்களையும், பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சமூக மற்றும் மகளிர் நலத்துறை- கூட்டுறவு துறை- வேளாண்மை துறை என பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்களையும் நிதி அமைச்சர் மரிய வில்சன் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டார்.
தமிழக வெற்றிக் கழகம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM