நடிகர், பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முக ஆளுமை கொண்ட பிரேம்ஜி அமரன் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருப்பதாக அப்படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் கருப்பையா முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் பிரேம்ஜி அமரன், மெல்வின் டேவிட், சாகித்யா, மாஸ்டர் ஆதர்ஷ், ஆனந்தன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மேலும் நடிகை அனுஹாசன் இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார். மியூசிக்கல் ஹாரராக தயாராகும் இந்த திரைப்படத்தை பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் சார்பில் இயக்குநர் கருப்பையா முருகன் தயாரிக்கிறார்.
இதனிடையே இயக்குநர் கருப்பையா முருகன் - பிரேம்ஜி அமரன் கூட்டணியில் 'வல்லமை' எனும் திரைப்படம் வெளியாகி கவனத்தை ஈர்த்தது என்பதும் இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கான குறைந்தபட்ச எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM