சிறந்த இசையமைப்பிற்கான தேசிய விருதினை வென்ற 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவான 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழக மாநகரான கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
'வாத்தி' திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'விஸ்வநாத் & சன்ஸ்'. இதில் சூர்யா மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தை ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.
எதிர்வரும் 14ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இந்த படத்தின் முதல் பகுதியை பின்னணி இசையுடன் பார்த்துவிட்டேன். அந்த நம்பிக்கையில் சொல்கிறேன். இந்தத் திரைப்படம் சூர்யாவின் ரசிகர்களை மட்டுமல்ல... அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் பிடிக்கும். அதிலும் முதல் பாதியில் இடம் பெறும் கொமடி காட்சிகள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்'' என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM