தமி­ழீ­ழத்­தினை உரு­வாக்கும் பாதை­யி­ல் நல்லாட்சி.!

Published By: Robert

10 Oct, 2017 | 11:06 AM
image

வடக்கு, கிழக்கு இணைப்பின் மூலம் சமஷ்டி ஆட்­சி­யினை வழங்கி இறு­தியில் தமி­ழீ­ழத்­தினை உரு­வாக்கும் பாதை­யி­லேயே அர­சாங்கம் பய­ணித்து வரு­கின்­றது. இரா­ணுவம் தண்­டிக்­கப்­ப­டு­வதே இதன் பிர­தான நோக்­க­மாகும் என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச எம்.பி. தெரி­வித்தார். 

பிர­தமர்  ரணில் விக்­ர­ம­சிங்க மூல­மா­கவே ஈழத்­துக்­கான பயணம் முன்­ன­கர்த்­தப்­பட்டு வரு­கின்­றது எனவும் அவர் குறிப்­பிட்டார். 

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் மக்கள் சந்­திப்பு நிகழ்வின் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார், 

அவர் மேலும் கூறு­கையில், 

இந்த அர­சாங்கம் முழு­மை­யாக சர்­வ­தேச மற்றும் புலம்­பெயர் அமைப்­பு­களின் தேவை

க்கு அமை­யவே ஆட்­சி­ய­மைத்து வரு­கின்­றது. அதன் பார­தூ­ர­மான நகர்­வு­களை இன்று அர­சாங்கம் நிறை­வேற்றி வரு­கின்­றது.  சர்­வ­தேச சட்­டத்­திற்கு அமைய நாட்­டினை இரண்­டாக்கி  தனி ராஜ்­ஜியம் அமைக்கும் வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­க­ப்பட்டு வரு­கின்­றது. இதற்­காக இரண்டு நிபந்­த­னைகள் இடப்­பட்­டுள்­ளன . 

அதில் முத­லா­வது சிறிது காலத்­திற்கு வடக்கு,  கிழக்கு மாகா­ணங்­களில் மாத்­திரம் தனித்த அதி­கா­ரங்­களில் மாகா­ணங்­களை நடத்தி செல்­லு­த­லாகும்.  இது மிகவும் மெது­வாக முன்­னெ­டுக்­கப்­படும் ஒரு தந்­தி­ர­மாகும். வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை இணைத்து சமஷ்டி அதி­கா­ரங்­களை கொடுத்­த­வுடன் இந்த காரணி நிறை­வேறும். அடுத்­த­தாக வடக்கு, கிழக்கில் மக்கள் இரா­ணுவ குற்­றங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­தாக கூறி அவை தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வலி­யு­றுத்­த­லாகும். அதற்­கா­கவே இப்போது இரா­ணுவ குற்­றங்கள் என்ற பெயரில்  சர்­வ­தேச விசா­ர­ணைகள் ஏற்­ப­டுத்த முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. 

இதற்கு  சாத­க­மாக சரத் பொன்­சேகா, தமி ழர் தரப்பு உள்­ளிட்ட இந்த அர­சாங்­கத்தின் சிலரும் போர்­க்குற்­றங்கள் தொடர்பில் தானா­கவே வாய் திறந்து வரு­கின்­றனர். இது சர்­வ­தேசதரப்­பி­ன­ருக்கு போது­மான சாட்­சி­ய­மாக அமையும். அதன் மூலம் எமது இரா­ணு­வத்தை தண்­டிக்க சாட்­சி­யங்கள் நிறு­வப்­படும். அதன்மூல­மாக எமது இரா­ணு­வம் சர்­வ­தேச தூக்கு மேடைக்கு கொண்­டு­செல்­லப்­படும். 

ஆகவே இரண்­டா­வது கார­ணியை நிறை­ வேற்­று­வதன் மூலமாக இலங்­கையில் தமிழர்கள்  மீது இராணுவ அடக்­கு­முறை கையா­ளப்­பட்­ட­தா­கவும், அர­சாங்கம் இதனை தடுக்­கவோ அல்­லது முழு­மை­யாக நிறுத்­தவோ முடி­யாது போன­தனால், வடக்கு, கிழக்கு மக்­க­ளுக்கு சமஷ்டி மூல­மாக சில நியா­யங்கள் கிடைக்கும் நிலையில் வடக்கு, கிழக்கு பிர­தே­சங்கள் தனி  இராச்­சி­ய­மாக ஏற்­றுக்­கொள்­ளப்­படும் எனவும்   ஐக்­கிய நாடுகள் சபை தீர்­மானம் ஒன்றை நிறை­வேற்றும். இந்த  நகர்­வு­களே இப்­போது முன்னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

இதற்கு தேவை­யான இரண்டு நகர்­வு­களை தான் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­ன­கர்த்தி வரு­கின்றார். அவர் தனது ஆட்சிக் காலத்தில் தமி­ழீ­ழத்தை உரு­வாக்கிக்கொ­டுக்கும் பல­மான  நகர்­வு­களை முன்னெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தனது ஆட்சிக் காலத்தினை கொண்டு நடத்துகின்றார். இறுதியில் எமது இராணுவம் போர் க்குற்றவாளிகள் என தண்டிக்கப்படுவதும், நாடு இரண்டாக பிளவுபடுவதும் புலிகளை நியாயப்படுத்தி தமிழீழம் உருவாகுவதி லுமே முடிவடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27