இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சாண்டிபுரா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அம்மாநில சுகாதாரத் துறை உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 35 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 22 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
15 வயதிற்குட்பட்ட சிறுவர்களிடையே மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 184 சந்தேகத்திற்குரிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
35 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, 11 பேரின் இரத்த மாதிரிப் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி இதுவரை 22 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
07 நோயாளிகள் காந்திநகர், சபர்கந்தா-ஹிமத்நகர், படான், ராஜ்கோட் மற்றும் பவநகர் ஆகிய நகரங்களிலுள்ள வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
வைரஸைப் பரப்பும் மணல் ஈக்களை ஒழிக்கும் பொருட்டு, வீடுகளின் மண் சுவர்களில் உள்ள விரிசல்கள் மற்றும் பிளவுகளை அடைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கால்நடைகள் வளர்க்கப்படும் பகுதிகளைச் சுற்றித் தீவிர பூச்சிக்கொல்லி மருந்துத் தெளிப்புப் பணிகள் களப்பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல உறுப்புகள் செயலிழப்பதைத் தடுக்கும் வகையில், அறிகுறிகளுடன் வரும் குழந்தைகளை உடனடியாக ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் வசதி கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்க அரசு மற்றும் தனியார் சிறுவர் வைத்தியசாலைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM