சர்வதேச கடற்பரப்பில் காணப்படும் பயங்கரவாத அச்சுறுத்தலை முறியடிக்க பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு மற் றும் அனுபவப் பகிர்வு அவசியம். இலங்கையின் பயங்கரவாதத்தை முறியடித்த அனுபவம் எமக்கு உள்ள போதிலும் சர்வதேச ரீதியில் இன்று சகல நாடுகளும் முகங்கொடுத்து வரும் பயங்கரவாத செயற்பாடுகளை அனைவரும் இணைந்தே முறியடிக்க வேண்டும் என்று கடற்படை தளபதி ரியல் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா தெரிவித்தார்.
இலங்கை கடற்படையின் ஏற்பாட்டில் எட்டாவது தடவையாகவும் நடத்தப்படும் காலி கலந்துரையாடல் சர்வதேச கடற்படை பாதுகாப்பு மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமாகியது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் நடத்தப்படும் இந்த கடற்படை மாநாடு எட்டாவது தடவையாக கொழும்பில் நடத்தப்படுகின்றது. இந்த மாநாட்டில் இலங்கையின் கடற்படை தளபதி உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் பிரதானிகள், தளபதிகள் மற்றும் முப்படை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டதுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர். அத்துடன் சர்வதேச நாடுகளின் தூதுவர்களும் புத்திஜீவிகளும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
மேலும் நேற்றைய மாநாட்டின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன ஆகியோருக்கு நிகழ்வில் கலந்துகொண்டதற்கான கடற்படை நினைவுச் சின்னங்களை கடற்படை தளபதி ரியல் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா வழங்கியிருந்தார்.
இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான், பிரித்தானியா, பாகிஸ்தான் உள்ளடங்கலாக 51 சர்வதேச நாடுகளின் கடற்படை பிரதிநிநிதிகளும், 12 சர்வதேச அமைப்புகளும் கலந்துகொண்டன.
இன்றும் தொடரும் இந்த கடற்படைமாநாடானது இம்முறை கடல்சார் பாதுகாப்பில் சர்வதேச நாடுகளின் பங்களிப்பு என்ற மையக் கருத்தினை கொண்டு இடம்பெறுகின்றது. காலி கலந்துரையாடல் மாநாட்டில் உரையாற்றிய கடற்படை தளபதி ரியல் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா உரையாற்றுகையில் கூறியதா வது,
இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பில் இலங்கை கடற்படை மிகவும் அவதானமாகவும் பூரண ஒத்துழைப்பின் மூலமாகவும் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக இந்து சமுத்திரத்தில் பாதுகாப்பான பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்தை மேற்கொள்ள உலக நாடுகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்ற நிலைமை உள்ளது. அதனை மீறாது நாம் செயற்பட்டு வருகின்றோம். அத்துடன் இந்து சமுத்திரத்தில் இலங்கை முக்கிய மையமாக அமைந்துள்ளதுடன், கப்பல் போக்குவரத்தில் தவிர்க்க முடியாத ஒரு நாடாக காணப்படுகின்றது. இலங்கையினை அடிப்படையாக வைத்தே இந்தியா, சீனா உள்ளிட்ட பாரிய நாடுகளும் ஏனைய நாடுகளும் செயற்பட்டு வருகின்றன . ஆகவே அவர்களுக்கான ஒத்துழைப்புகளை வழங்குவதன் மூலமாக நட்புறவு ரீதியில் நாம் செயற்படுகின்றோம்.
மேலும் சர்வதேச கடற்பரப்பில் காணப்படும் பயங்கரவாத அச்சுறுத்தலை முறியடிக்க பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு, மற்றும் அனுபவப் பகிர்வு அவசியம். இலங்கையின் பயங்கரவாதத்தை முறியடித்த அனுபவம் எமக்கு உள்ள போதிலும் சர்வதேச ரீதியில் இன்று சகல நாடுகளும் முகங்கொடுத்து வரும் பயங்கரவாத செயற்பாடுகளை அனைவரும் இணைந்தே முறியடிக்க வேண்டும். இந்து சமுத்திர பகுதியில் சமாதானமான மற்றும் அச்சுறுத்தல் அற்ற, பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM