வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா இன்று (3) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த ஆலயமான அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலய உற்சவப் பெருவிழாவின் துவசாரோகண உற்சவம் இன்று நடைபெறுகிறது.
மூலமூர்த்திக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் நடைபெற்ற சிறப்புப் பூஜை வழிபாடுகளை அடுத்து, வசந்த மண்டபத்திலிருந்து உற்சவ மூர்த்தி சர்வ அலங்காரங்களுடன் கொடிஸ்தம்பம் அமையப்பெற்றுள்ள இடத்திற்கு எழுந்தருளினார்.
பின்னர் கொடிஸ்தம்பத்திற்குச் சிறப்பு அபிஷேக பூஜைகளை சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.
மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத தேவாரப் பாராயணங்கள் இசைக்க, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் நடந்தேறியது.
மாமாங்கேஸ்வரரின் கொடியேற்றத்தைக் காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
அமிர்தகழி மாமாங்கேஸ்வரரின் தீர்த்த உற்சவப் பெருவிழா ஆடி அமாவாசை தினமான எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM