கொழும்பு சைவ மங்கையர் கழகத்தின் ஏற்பாட்டில் “வானவில் பக்தி இசை –நர்த்தன சங்கமம்”எனும் இறை இசையும் பாரம்பரிய நாட்டியமும் இணையும் ஆன்மீக மாலை நிகழ்ச்சி எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
29 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில் சென்னையைச் சேர்ந்த பிரபல கலைஞர்களான திருமதி வினயா கார்த்திக் ராஜன், திருமதி வித்யா கல்யாணராமன் மற்றும் ஆர்.பி.ஷ்ரவன் ஆகியோரின் ஆன்மீக இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
அத்துடன் ,“முருகன் – வள்ளி திருக்கல்யா ணம்” பரதநாட்டிய நாட்டிய நாடகமும் நடைபெறவுள்ளது.
பிரிட்டனின் நாட்டியசேஷ்த்ரா பரதநாட்டியப் பள்ளியைச் சேர்ந்த திருமதி திரிவேணி சங்கரின் நடன அமைப்பில் நடைபெறும் இப்பரதநாட்டிய நாட்டியநாடகத்தில், பாடசாலையின் நடன ஆசிரியை திருமதி பூங்கோதை திவாகரனின் பயிற்சியில் பாடசாலை மாணவிகள் பங்குபற்றவுள்ளனர்.
1930 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சைவ மங்கையர் கழகம், 96 ஆண்டு கால பெருமையைக் கொண்டாடும் இத்தருணத்தில், சைவ மங்கையர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 2,500 மாணவிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நவீன விளையாட்டு வளாகத்தை உருவாக்குவதற்கான நிதி திரட் டும் நோக்குடன் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM