படம் காட்டும் அரசியல் மக்களிடத்தில் செல்லாது : திலகராஜ்

Published By: Digital Desk 7

09 Oct, 2017 | 02:49 PM
image

“கலர் கலராக வாகனப் பேரணியில் வாக்கு கேட்டு வரும் அரசியல் வாதிகளுக்கு மத்தியில் பழைய மலையக கலாச்சாரம் மாற்றியமைக்கப்பட்டு இன்று மக்களுக்கு சேவை செய்வதற்காக மலையகமெங்கும் நாங்கள் இடைவிடாது பயணங்களை மேற்கொள்கின்றோம் இது கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் எமக்கு கொடுத்த அபரிமிதமான அங்கீகாரத்துக்கு நாங்கள் செய்யும் கடமை” என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

அப்கெட், கவரவில பகுதியில் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நேற்று இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திலகராஜ் இவ்வாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வில் திலகராஜ் மேலும் உரையாற்றுகையில்,

"வெறுமனே தேர்தல் காலங்களில் மட்டும் வர்ண வாகன  பேரணி காட்டி மக்களை முட்டாள்களாக்கிய காலம் மலையேறிவிட்டது. இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி எனும் குடையின் கீழ் பாராபட்சமற்ற மக்கள் பணிகள் மலையகமெங்கும் பரந்துபட்டளவில் நநடைபெறுகின்றது.

தொடர்ந்தும் இது போன்ற  பணிகள் எமது மக்களுக்கு கிடைக்க வேண்டுமாயின் எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளில் எமது வட்டாரத்தில் எம்முடைய ஒருவரை தெரிவு செய்ய வேண்டும், அதன் மூலம் எமது தேவைகளை இலகுவாக்கி கொள்வதோடு மட்டுமன்றி விரைவான சேவைகளையும் பெற்றுக்காள்ள கூடியதாயிருக்கும். 

கடந்த பல வருடங்களாக வீடு கட்டுவதற்கு உகந்த இடமாக காணப்பட்ட, இன்று அடிக்கல் நாட்டப்பட்ட இந்த இடம் அரசியல் சுயநலத்துக்காக மக்களுக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 4,000 வீடுகளில் குறிப்பிட்ட அளவு வீடுகளை இந்த இடத்தில் கட்டியிருந்தால் இன்று மக்கள் குடியேறி ஆண்டுகள் கடந்திருக்கும்.

இன்று நாங்கள் வரும் பாதைகளில் ஆங்காங்கேக பாரத பிரதமர் நரேந்திர மோடியின் படத்தோடு தங்களின் படங்களையும் வைத்து காட்சி படுத்தியுள்ளார்கள். இந்த படம் காட்டும் அரசியல் எல்லாம் காலம் கடந்து போய்விட்டது, இனியும் படம் காட்டும் அரசியல் மக்களிடத்தில் செல்லாது” என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59