எம்மில் சிலர் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று அவரது குரலின் ஒலி அளவில் மாற்றம் ஏற்படும். வேறு சிலருக்கு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தால் குரலில் சோர்வு ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உங்களுடைய குரல் நாண் அல்லது குரல் வளையின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவதானிக்கலாம். இதற்கு தற்போது நவீன சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை பெறலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
குரல் கரகரப்பு - பேசும் போது குரலில் அசைவுகளிலும், குரல் ஒலியிலும் சமசீரற்ற நிலை- தொண்டை கரகரப்பு - குரலொலியை தற்காலிகமாக இழத்தல்- குரல் ஒலியுடன் மூச்சிரைப்பு கேட்பது- ஆகிய அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உங்களுடைய குரல் வளை புண்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது என அவதானிக்கலாம்.
மேடைப் பேச்சாளர்கள்- ஆசிரியர்கள்- பாடகர்கள்- சொற்பொழிவாளர்கள்- இணையதளத்தில் தொடர்ந்து விடியோவில் பேசுபவர்கள்- இவர்களுக்கு வாழ்வாதாரம் குரல் தான். குரலை தொடர்ந்து பாவிக்கும்போது குரல் வளையின் மேற்பகுதியில் புற்றுநோய் அல்லாத புண்கள் பாதிப்பு ஏற்படும். இத்தகைய தருணத்தில் குரல்வளையின் முன்பகுதியில் தோல் கடினமானதாக மாறிவிடும்.
அங்குள்ள திசுக்களில் வீக்கம் அல்லது கடினத்தன்மை உருவாகிவிடும். இவற்றால் குரல் ஒலியில் மாற்றங்கள் ஏற்படும். இந்த கட்டிகள் குரல் நாண்களின் இயல்பான அதிர்வை சீர்குலைக்கிறது. இதனால் பேசுவதையோ பாடுவதையோ இடையூறு செய்கிறது. இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள் முதலில் பொதுவாக குரலுக்கு ஓய்வு கொடுங்கள் என்பதை மட்டும் அறிவுறுத்துவர்.
சிலருக்கு இத்தகைய குரல் வளை பகுதியில் ஏற்படும் புண்கள் தீங்கற்றவை என்றாலும் முறையான பரிசோதனை செய்து முழுமையான சிகிச்சையை பெறாவிட்டால் அவை நாட்பட்ட அசௌகரியத்தை ஏற்படுத்தும். இயல்பான அளவை விட அதிகமாக பேசுவது அல்லது தேவையற்ற இடங்களில் அதிக ஒலியுடன் பேசுவது அடிக்கடி தொண்டையை செருமுவது சுற்றுச்சூழல் காரணிகள் நெஞ்செரிச்சல் என பலவற்றை காரணங்களாக விவரிக்கலாம்.
இவர்களுக்கு பிரத்யேக பரிசோதனை செய்த பிறகு, குரலுக்கான சிகிச்சை வழங்கப்படுகிறது. குரல் நாண்- குரல் நாண் அதிர்வு - குரல் வளை- ஆகியவற்றின் இயல்பு தன்மையை மீட்டெடுக்க நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி நிவாரணம் தருவர். வெகு சிலருக்கு மட்டுமே இத்தகைய பாதிப்பு நாட்பட்டதாக நீடித்தால் சிறிய அளவிலான சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் அளிப்பர்.
வைத்தியர் கௌரி சங்கர்
தொகுப்பு அனுஷா.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM