பிரத்தியேக விஜயமொன்றை மேற்கொண்டு ஜேர்மனி சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பின்லாந்து நோக்கி பயணமாகின்றார்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஆராயவுள்ளதுடன், இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக மற்றும் பொருளாதார புதிய தொடர்புகளை ஏற்படுத்துவது தொடர்பில் அந்நாட்டு தலைவர்களுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தையும் நடத்தவுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரத்தியேக விஜயமொன்றை கடந்த வியாழக்கிழமை ஜேர்மன், பர்லின் நகரிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் தனது பிரத்தியேக விஜயத்தை முடித்துகொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று தி்ங்கட்கிழமை பின்லாந்து பயணிக்கவுள்ளார். வரலாற்றில் முதற்தடவையாக இலங்கை பிரதமர் ஒருவர் அநநாட்டுக்கு பயணிக்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்த விஜயத்தின் போது வர்த்தக, பொருளாதார, கைத்தொழில் ஆகிய துறையில் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்குடன் பிரதமர் தலைமையிலான குழு பின்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளது.
மேலும் அந்நாட்டு அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்ந்து அதன் அனுபவங்களை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளிலும் பிரதமர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்போது பின்லாந்து ஹெல்சின்கி நகரில் வைத்து பின்லாந்து பிரதமர் யுஹா சிபிலர் உள்ளிட்ட உயர் மட்ட தலைவர்களுடன் பிரதமர் தலைமையிலான குழுவினர் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பின்லாந்து உத்தியோகபூர்வ விஜயத்தில் பிரதமரின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க, துறைமுக மற்றும் கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க, அரசியலமைப்பு நிர்ணய சபையின் மேலதிக செயலாளர் யுரேஷா பெர்ணான்டோ, பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அத்தாவுதஹெட்டி ஆகியோர் பயணிக்கவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM