இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்தது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 188 ஓட்டங்களை எடுத்தது.
இதன் பின்னர் 189 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த அவுஸ்திரேலியா 8.5ஆவது ஓவரில் 2 விக்கெட்டுகளுக்கு 89 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அந்த ஓவரின் கடைசி பந்தை ஜடேஜா வீசினார். அதை ஸ்மித் அடிக்க முயன்ற போது எக்ஸ்ட்ரா கவரில் நின்று கொண்டிருந்த கோஹ்லி பிடியெடுத்தார்.
அப்போது, காதில் மாட்டியிருந்த மைக்ரோபோன் வழியாக ஸ்டீவ் ஸ்மித் Channel-–9 என்ற தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது, இந்த கவனச்சிதறலே ஆட்டமிழந்ததற்கு காரணம் என சர்ச்சை எழுந்துள்ளது.
தொடர்ந்து கோஹ்லி ஸ்மித்தை நோக்கி வெளியே போ என்று கோபமாக பேசினார், பேட்டி கொடுத்துக் கொண்டே இந்தியாவுக்கு எதிரான போட்டியை இலகுவாக எடுத்துக் கொண்டது தான் கோஹ்லியின் கோபத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலிய ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் கோஹ்லியின் செயலை வரவேற்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM