தேங்காய் உற்பத்தி வீழ்ச்சிக்கு குரங்குகளின் சேட்டையே காரணமாகும். 10 இலட்சம் குரங்குகளினால் 1 இலட்சம் ஏக்கர் விளைநிலங்களின் தெங்கு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் யானை, பன்றிகளினாலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பெளத்த நாடானாலும் மிருகங்களை பார்க்கிலும் மனித குலத்தை பாதுகாக்க வேண்டியுள்ளது. ஆகவே, இந்த பிரச்சினைக்கு காத்திரமான முடிவு எடுக்க நேரிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தெங்கு விளைநிலங்களில் புதிதாக வீடுகள் நிர்மாணிக்கப்படுவதனாலும் தெங்கு உற்பத்தி குறைந்துள்ளது. இதனை மக்கள் சாதாரண பிரச்சினையாக கருதக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய உணவு உற்பத்தியை மேம்படுத்தும் முகமாக ஜனாதிபதி தலைமை யில் பல அமைச்சுகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் உணவு உற்பத்தி வாரம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அநுராதபுரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. விளைச்சலை பெருக்கிட ஒருமித்து எழுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் உணவு உற்பத்தி செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் பிரதான நிகழ்வு நேற்று அநுராதபுரம், கெகிராவ பிரதேசத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் உரையாற்றுகையில்,
தற்போது அரிசி மற்றும் தேங்காய் 100 ரூபா என்ற சுவரொட்டிகள் நாடுபூராகவும் ஒட்டப்பட்டிருப்பதனை நான் அவதானித்தேன்.
எனினும் இதற்கு அரசாங்கத்தின் மீது குற்றம்சுமத்துவதில் அர்த்தம் கிடையாது. ஏனெனில் தெங்கு உற்பத்தி முக்கோண வலயத்தில் இன்று வீடமைப்பு திட்டங்களினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தெங்கு உற்பத்திக்கான ஏக்கர் கணக்கிலான நிலங்கள் வீடுகள் நிர்மாணிப்பதனால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை அனைவரும் இலகுவாக கருதக் கூடாது. அத்துடன் தெங்கு உற்பத்திக்கு மிருகங்களின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதன்படி குரங்கு, பன்றி,யானைகளின் தாக்கமும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இலங்கையில் 10 இலட்சம் வரையான குரங்குகள் உள்ளன. இதில் ஒரு இலட்சம் ஏக்கர் வரையான தெங்கு உற்பத்திக்கு குரங்குகள் வேட்டு வைக் கின்றன. இது சாதாரண விடயமல்ல. அதுமாத்திரமன்றி மயில்களினாலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. கொழும்பிலும் குரங்குகளின் எண்ணிக்கை அதிகமாகும்.
எனினும் இதனை கட்டுப்படுத்த முனைந் தால் பல சிக்கல்கள் ஏற்படும். ஏனெனில் நாம் பெளத்தர்கள். பெளத்த தர்மத்தின் பிரகாரமே மிருகங்கள் விடயத்தில் முடிவுகளும் எடுக்க வேண்டியுள்ளது. மிருகங்களை பாதுகாக்க வேண்டும் என்றாலும் அதனை பார்க்கிலும் மனிதனை பாதுகாப்பதே எமது பிரதான இலக்காகும். ஆகவே, இந்த விடயத்தில் காத்திரமான தீர்மா னங்கள் எடுக்க நேரிடும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM