(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அதிகரித்த மஹபொல கொடுப்பனவு போதுமானதா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் கேள்வி கேட்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
வருடத்துக்கு வருடம் பிரதான பணவீக்கம் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் பிரகாரம் மே மாதம் 5.5 வீதத்தில் இருந்து ஜூன் மாதம் 6.8வீதமாக அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில் 1.3வீதத்தால் பணவீக்கம் அதிகரித்துள்ள இந்த தருணத்தில், தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின் படி ஒரு நபருக்கு 30 நாட்கள் வாழ்வதற்கு 17,315 ரூபா போதுமானது என தெரிவிக்கப்படுகின்றது. பணவீக்கம் அதிகரிக்கும் இந்நிலையில் அதிகரித்து இருக்கும் மஹபொல கொடுப்பனவானது போதுமானதா என்ற கேள்வி எழுகின்றது .
நாட்டு மக்கள் வாழ்க்கைச் சுமையாலும், அழுத்தங்கள் பலவற்றாலும் பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக, அதிருப்தியுடன் கஷ்ட வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வருடத்திற்கு வருடம் பிரதான பணவீக்கம் அதிகரிக்கும் இந்நிலையில், மஹபொல மாணவர்கள் மட்டுமல்ல, நாட்டு மக்கள் எவ்வாறு வாழ்கின்றனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 30 நாட்கள் வாழ்வதற்கு ரூ. 17,315 ரூபா போதுமானதா என கேள்வியும் எழும்புகின்றது.
70வீத பணவீக்கம் காணப்படும் வேளை நாட்டில் வேறு அரசாங்கம் இருந்தது. இந்த தருணத்தில் 17,315 ரூபா வாழ்வதற்கு போதுமானது என பிரதமரே நீங்கள் நம்புகிறீர்களா என கேட்கிறேன் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM