(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்தை சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ புதன்கிழமை (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
ஊடகவியலாளர்களுக்கான தொழில்முறை தரநிலைகளை அறிமுகப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்குமான நோக்கில், 'இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை' நிறுவுவதற்கும், அது தொடர்பான அல்லது அதன் விளைவாக எழும் விடயங்களுக்கு ஏற்பாடுகளை செய்வதற்காகவும் இச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.
இச்சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரை ஆற்றிய சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ,
இச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டமையானது ஊடகவியலாளர்களுக்கும் ஊடகத் துறையினருக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகும்.
பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனம் என்பது, ஊடகத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில்முறையாளர்களின் தரம், சிறப்பு மற்றும் ஒழுக்க நெறிமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் அல்லது விசேட சட்டபூர்வ அதிகாரத்தின் கீழ் நிறுவப்படும் ஒரு அதிகாரப்பூர்வ தொழில்முறை அமைப்பாகும் என்றார்.
இது பொறியியல், கணக்காளர் அல்லது சட்டத்துறை போன்ற ஏனைய அங்கீகரிக்கப்பட்ட தொழில்களுக்காக உள்ள பட்டய நிறுவனங்களைப் போன்றதொரு கருத்தாக்கமாகும்.
ஊடகத்துறையையும் சமூகத்தில் அதிக செல்வாக்கும் பொறுப்பும் கொண்ட ஒரு நிபுணத்துவத் தொழிலாகச் சட்டபூர்வமாகவும் சமூக ரீதியாகவும் அங்கீகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM