எம்மில் சிலருக்கு திடீரென்று காது வலி விட்டு விட்டு வரக்கூடும். வேறு சிலருக்கு கேட்கும் திறனில் மந்த நிலை ஏற்படக்கூடும். சிலருக்கு காது சார்ந்த விடயங்களில் விவரிக்க இயலாத அசௌகரியங்கள் ஏற்படக்கூடும்.
இந்த அறிகுறிகள் அனைத்தும் யூஸ்டாக்கியன் குழாய் செயலிழப்பு பாதிப்பாக இருக்கலாம் என்றும், இதற்கு தற்போது நவீன சிகிச்சைகள் அறிமுகமாகி பலன் அளித்து வருகிறது என்றும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
காது அடைப்பு , உணவுகளை மெல்லும்போது அல்லது விழுங்கும் போது காதில் ஏற்படும் வினோத ஒலிகள், சீரான இடைவெளியில் ஏற்படும் காது வலி, கேட்கும் திறனில் மந்த நிலை... ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால், உங்களுக்கு மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் யூஸ்டாக்கியன் குழாய் செயலிழப்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என குறிப்பிடலாம்.
எம்முடைய காது பகுதியில் அதிலும் குறிப்பாக நடு செவி பகுதியையும், மூக்கு மற்றும் தொண்டையின் பின்புற பகுதியையும் இணைக்கும் வகையில் ஒரு காற்று பாதை உண்டு. இதனை யூஸ்டாக்கியன் குழாய் என குறிப்பிடுகிறார்கள். திடீரென்று உயரமான பகுதியில் பயணிக்கும் போதோ அல்லது ஆகாய விமானத்தில் பயணிக்கும் போதோ எம்முடைய சமநிலை தவறி, காதில் அடைப்பு பாதிப்பு ஏற்படக்கூடும்.
இத்தகைய தருணத்தில் ஏற்படும் எதிர்பாராத அழுத்தத்தை சமநிலைப்படுத்துவது தான் யூஸ்டாக்கியன் குழாயின் முதன்மையான பணியாகும். இவை நடுக்காது பகுதியில் சுரக்கப்படும் சுரப்புகளை வெளியேறுவதற்கும் உதவுகிறது. இந்தக் குழாயில் ஏதேனும் அடைப்பு பாதிப்பு ஏற்பட்டால்... கேட்கும் திறனில் பாதிப்பை உண்டாக்கும். இதன் காரணமாக செவிகளின் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டிய காற்று கிடைக்காமல் போகக் கூடும். பெரும்பாலானவர்கள் தங்களது வாழ்நாளில் சிலமுறையேனும் இத்தகைய பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.
சளி ,காது பகுதியில் ஏற்படும் தொற்று பாதிப்பு, மூக்கடைப்பு ஆகிய காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு விமான பயணம்- ஸ்கூபா டைவிங் எனப்படும் சாகச விளையாட்டு -மலையேற்றம்- ஆகியவற்றின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இது பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிகளவில் ஏற்படுகிறது. பெரும்பாலும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் இரண்டு வாரங்களில் சிகிச்சை இல்லாமல் தானாக சரியாகிவிடும். ஆனால் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தால்.... இதற்கு சிகிச்சை அவசியம். இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள் பிரத்யேக பரிசோதனையை மேற்கொண்டு சிறிய அளவிலான சத்திர சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குகிறார்கள்.
வைத்தியர் அப்துல் ரஹீம் தொகுப்பு அனுஷா.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM