நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் புது டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்குபற்றிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை பொலிஸார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதற்கு தமிழக வெற்றி கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தி கைது விவகாரத்தில் இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் 'தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது' என கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது....
''தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது!
டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அஹிம்சை போராட்டத்திற்கு ஆதரவாக களத்தில் இறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தியை டெல்லி காவல்துறை இழுத்துச் சென்று கைவிலங்கிட்டு கைது செய்தது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதலாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வு அமுல்படுத்தப்பட்ட தருணத்திலிருந்து அதன் நம்பகத் தன்மை குறைந்து வருவது மட்டுமல்லாமல் மாணவர்கள் தொடர்ந்து மன அழுத்தத்தை சந்தித்து வருகின்றனர். அவர்களின் எதிர்கால கனவுகள் ஒரு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளன.
நீட் தேர்வினால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எனவே நீட் தேர்வை மத்திய அரசு முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்'' என தெரிவித்துள்ளது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM