(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கும் புகையிரத திணைக்களத்திற்கும் ஒதுக்கப்பட்ட காணிகள் வெவ்வேறு தேவைகளுக்காக பல்வேறு நிறுவனங்களால் கையகப்படுத்தியுள்ளதால் நீர் வழிந்தோட வழியின்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதுடன், வெள்ள அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு அவை காரணமாக அமைகின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரரத்தின் போது மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கும் புகையிரத திணைக்களத்திற்கும் ஒதுக்கப்பட்ட காணிகள் இப்போது வெவ்வேறு தேவைகளுக்காக பல்வேறு நிறுவனங்களால் கையகப்படுத்தப்படுகின்றன.
இப்போது நாட்டில் டெங்கு நிலைமை அதிகரிக்க காரணம் நீர் வழிந்தோடும் பிரதேசங்கள் கையகப்படுத்துவதால் நீர் போக வழியின்றி நீர் நிலைகள் உருவாகி நுளம்புகள் பெருகுகின்றன. தொற்றுநோய்கள் தீவிரமடைந்துள்ளன.
அத்துடன் வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால் வெள்ள அனர்த்தங்களும் ஏற்படுகின்றன. எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ள அனர்த்த நிலைமை ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்படுவதால் இது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கை என்னவென்று கேள்வியெழுப்பினார்.
இதற்கு எழுந்து பதிலளித்த போக்குவரத்துஇ நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கஇ பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கத்தின் கருத்துக்களுக்கு இணங்குகின்றேன். வீதி பராமரிப்புக்கு உட்பட்ட வடிகாண்கள் மற்றும் நீரோடைகள் மட்டுமே வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பராமரிக்கப்படுகின்றன.
வவுனியா மாவட்டத்தில் சட்டவிரோத கட்டிடங்கள் உள்ளிட்ட அவ்வாறான இடங்கள் கிடையாது. ஏனைய இடங்களில் உள்ளூராட்சி நிறுவனங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.
தற்போது டெங்கு நிலைமையால் சிரமதான பணிகளை முன்னெடுத்து புகையிரத திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் பாவனையின்றி இல்லாத இடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகின்றது என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM