பெப்ரவரி மாதம் நான்காம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை பகிஷ்கரிப்போம் என வட மாகாண காணாமல் போனோரை தேடும் உறவினர்கள் அமைப்பு நேற்று தீர்மானம் எடுத்துள்ளது. அத்தோடு காணாமல் போனோர் தொடர்பில் பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சரின் கருத்துக்களையும் வன்மையாக கண்டிப்பதாகவும் இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் போன உறவினர்களின் அமைப்பு மற்றும் மன்னார் பிரஜைகள் குழு, ஆகியவற்றின் பிரதிநிதிகளின் சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை தெரிவித்தார்.
அத்தோடு தாங்கள் மேலும் சில தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் அருட்தந்தை குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
காணாமல் போனவர்கள் இறந்து விட்டதாக நாட்டின் பிரதமர் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம், அப்படி இறந்திருந்தால் இராணுவத்திடம் சரணடைந்த, ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எவ்வாறு இறந்தார்கள், மற்றும் முகாம்களிலும், வீடுகளிலும் வைத்து கடத்திச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது அவ்வாறு அவர்கள் இறந்திருந்தால் அதற்கு காரணமானவர்கள் யார்? அதற்கான நடவடிக்கை என்ன? பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி என்ன? போன்ற பல்வேறு கேள்விகள் காணாமல் போனோரை தேடும் உறவுகள் மத்தியில் காணப்படுகிறது.
மேலும் காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு ஏற்பாடு செய்வதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தினவின் கருத்தையும் காணாமல் போனோரை தேடும் உறவினர்கள் அமைப்பு கண்டிக்கிறது. காணாமல் போன உறவுகளுக்கு எந்த நீதியும் கிடைக்காது இவ்வாறான நடவடிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றார்.
இதேவேளை, பரணகம ஆணைக்குழுவின் கால நீடிப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் அந்த ஆணைக்குழுவை உடனடியாக கலைத்துவிட்டு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பங்களிப்புடன் காணாமல் போனவர்களின் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வட மாகாண காணாமல் போனோரை தேடும் உறவினர்கள் அமைப்பு தீர்மானித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவினர்களின் அமைப்பைச் சேர்ந்த தலைவர், செயலாளர் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM