கண்டி, நத்தரன்பொத்த பகுதியில் உள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் வாடகை வீட்டில் இருந்து மூன்று கைக்குண்டுகள் மற்றும் வாள்கள் உட்பட பல்வேறு ஆயுதங்கள் குவியலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் குழுவினர், குறித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் மனைவியால் கண்டியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்ட தகவலின் பேரில், குறித்த வீட்டில் சோதனை நடத்தி இந்த ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.
வட மாகாண பொலிஸ் பிரிவு ஒன்றில் கடமையாற்றும் இந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் இந்த வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளதோடு கணவன் - மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறும் பொலிஸார், அந்த ஆயுதங்கள் மேலதிக நடவடிக்கைக்காக பல்லேகலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பல்லேகலை பொலிஸாரும், கண்டியின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM