பயிர்களை கால்நடைகள் அழித்ததால் நேர்ந்த கொலை! ; சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

20 Jul, 2026 | 12:16 PM
image

தனது கால்நடைகள் மற்றுமொரு நபரால் செய்கையிடப்பட்டிருந்த மரக்கறி பயிர்களை அழித்தமையால்  ஏற்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹுங்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

தனது கால்நடைகளால் அழிக்கப்பட்ட பயிற்றங்காய் பயிர்களுக்கான இழப்பீட்டினை வழங்குவதற்காக குறித்த நபர், சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். 

அவ்வேளை ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறிய நிலையில், பயிர்ச்செய்கை மேற்கொண்டிருந்த சந்தேக நபரும் அவரது சகோதரரும் இணைந்து, கால்நடைகளின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் வெட்டித் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து, தப்பியோடிய இரு சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் வயது முதிர்ந்த ஒட்டகச்சிவிங்கி...

2026-08-19 16:29:03
news-image

ஊழல் தடுப்பு திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில்...

2026-08-19 16:25:49
news-image

''டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற சுங்க...

2026-08-19 15:45:01
news-image

தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைச்...

2026-08-19 15:43:18
news-image

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா...

2026-08-19 15:23:30
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்!

2026-08-19 15:15:38
news-image

உன்னிச்சை – வவுணத்தீவு அபிவிருத்திக்கு காணி...

2026-08-19 15:14:55
news-image

களுவாஞ்சிகுடியில் வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனை:...

2026-08-19 14:54:37
news-image

நெடுந்தீவுக்கான படகுச் சேவைகளில் குறைபாடுகள் ;...

2026-08-19 14:42:34
news-image

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி...

2026-08-19 14:44:18
news-image

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச...

2026-08-19 14:53:54
news-image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டை...

2026-08-19 14:29:16