கண்டி–மாத்தளை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள நக்கில்ஸ் மலைச்சாரல் பகுதியை ஒட்டிய பன்வில பிரதேச சபைப் பகுதி, அண்மைக் காலமாக சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
ஹுலுகங்கை, லெபனன், சோடி எல்ல, சாரி எல்ல, உன்னஸ்கிரிய மற்றும் ராஸ் எல்ல உள்ளிட்ட பல அழகிய நீர்வீழ்ச்சிகள் இப்பகுதியில் அமைந்துள்ளதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்த்து வருகின்றன.
மேலும், ஹாத்தலையில் அமைந்துள்ள தேயிலை கைத்தொழில் சுற்றுலாத் தளம், செம்புவத்தை தடாகம், விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் ரிவஸ்டன் போன்ற முக்கிய சுற்றுலா மையங்களும் இப்பகுதியின் சுற்றுலா வளர்ச்சிக்கு ஊக்கமளித்து வருகின்றன.
தற்போதைய கோடைக்காலத்திலும் குளிர்ச்சியான காலநிலையை அனுபவிப்பதற்காக தினமும் ஏராளமான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகை தருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளின் அதிகரித்த வருகையைக் கருத்தில் கொண்டு, பன்வில பிரதேச சபையால் சில இடங்களில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, புதிய சுற்றுலா விடுதிகள், தங்குமிடங்கள் மற்றும் சுற்றுலா குடில்கள் பலவும் இப்பகுதியில் உருவாக்கப்பட்டு, சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்த்துள்ளன.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM