(இராஜதுரை ஹஷான்)
தமது மனதில் உள்ள நோக்கத்தை முன்கொண்டு செல்வதற்காக நீதியரசர்களுக்கான நியமனங்களை வழங்குதல் இழுத்தடிக்கப்படுகிறது என்ற பிரச்சினை காணப்படுகிறது. ஜனநாயகத்துக்கு எதிரான இந்த செயற்பாட்டுக்கு எதிராக சட்டத்தரணிகள் சமூகம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதனால் நாம் பல விமர்சனங்களுக்கும் உள்ளாகலாம்.சட்டத்தின் ஆட்சியையும், நீதித்துறையை பாதுகாப்பதற்காகவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா அழைப்பு விடுத்தார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற இலங்கை இளம் சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பிரதம நீதியரசர் மற்றும் நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் செயற்பாடுகள் குறித்து மக்களை தெளிவுப்படுத்துவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்கிறேன்.
1978 ஆம் ஆண்டு இரண்டாம் அரசியலமைப்பு யாப்பில் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவி காலம் 65 ஆகவும், மேன்முறையீட்டு நீதியரசர்களின் பதவி காலம் 63 ஆகவும் வரையறுக்கப்பட்டது.
அன்று முதல் இன்றுவரையில் எவ்விதமான சிக்கலும், பிரச்சினையும் இல்லாமல் நீதியரசர்கள் பதவி வகித்தார்கள், உரிய காலத்தில் சேவையில் இருந்து ஓய்வுப்பெற்றார்கள்.
உலகளாவிய மோதல் காரணமாக பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இந்த அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து அரசாங்கம் தேவையற்ற பிரச்சினை மற்றும் சிக்கலை முன்வைத்துள்ளது.
தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் 2024 ஆம் ஆண்டு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 'உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிடவில்லை'அதேபோல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சட்டத்தரணிகள் சமூகம் உட்பட நாட்டு மக்கள் நீதியரசர்களின் பதவி காலம் வரையறுக்கப்பட்டுள்ளதால் நாட்டில் பாரதூரமான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிடவில்லை.
இவ்வாறான பின்னணியில் நீதியரசர்களின் பதவி காலத்தை அவசரமாக அதிகரிப்பதற்கான காரணம் குறித்து அரசாங்கம் இதுவரையில் சட்டத்தரணிகள் சமூகத்துக்கு தெளிவுப்படுத்தவில்லை.இவ்வாறான நிலையில் நாட்டின் பிரஜை என்ற அடிப்படையில் என்னுள் பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் இரகசியமான முறையில் நீதியரசர்களி;ன் பதவி காலத்தை நீட்டிக்க அரசாங்கம் முயற்சிப்பது ஏதேனும் உள்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது தெளிவாக விளங்குகிறது.
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் சேவையில் இருந்து ஓய்வுப்பெற்றதன் பின்னர் ஏற்படும் வெற்றிடம் தாமதமில்லாமல் நிரப்பப்படும். ஆனால் அண்மை காலமாக உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் காணப்படும் 08 நீதியரசர்களுக்கான வெற்றிடத்துக்கு இதுவரையில் நியமனம் வழங்கப்படவில்லை.இதனால் பெருமளவிலான வழக்குகள் நிலுவையில் காணப்படுகின்றன. ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் இது தெரியவில்லை.
தமது மனதில் உள்ள நோக்கத்தை முன்கொண்டு செல்வதற்காக நீதியரசர்களுக்கான நியமனங்களை வழங்குதல் இழுத்தடிக்கப்படுகிறது என்ற பிரச்சினை காணப்படுகிறது. ஜனநாயகத்துக்கு எதிரான இந்த செயற்பாட்டுக்கு எதிராக சட்டத்தரணிகள் சமூகம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.இதனால் நாம் பல விமர்சனங்களுக்கும் உள்ளாகலாம்.சட்டத்தின் ஆட்சியையும், நீதித்துறையை பாதுகாப்பதற்காகவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM